Show all

கோத்தபைய ராசபக்சே அளவுக்கு இல்லாமல் கொஞ்சம் மனசாட்சி உள்ளவன் போலிருக்கிறது, ஸ்லோபோதன் ப்ரால்ஜக்

14,கார்த்திகை,தமிழ்தொடர்ஆண்டு-5119 போஸ்னியா ராணுவத்தின் முன்னாள் படைத்தலைவரான ஸ்லோபோதன் ப்ரால்ஜக், சர்வதேச அறங்கூற்று மன்றத்தில் அறங்கூற்றுவர் கண் முன்னரே நஞ்சு அருந்தி தற்கொலை செய்து கொண்டார்.

கடந்த தமிழ்தொடர்ஆண்டு-5094லிருந்து 5097 வரையிலான ஆண்டுகள் வாக்கில் (1992- 1995) நடந்த போஸ்னியா போரின் போது குறிப்பிட்ட இனத்தவர்கள் போர் நெறிமுறைகளை மீறி படுகொலை செய்யப்பட்டதாக குற்றச்சாட்டு எழுந்தது. இதனை விசாரித்த சர்வதேச குற்ற தீர்ப்பாயம் போஸ்னிய ராணுவத்தின் படைத்தலைவராகச் செயல்பட்ட ஸ்லோபோதன் ப்ரால்ஜக் உள்பட 6 பேரை போர் குற்றவாளிகள் என அறிவித்தது.

 

இதனை எதிர்த்து குற்றவாளிகள் தரப்பில் நெதர்லாந்தின் தி ஹேக் நகரில் உள்ள சர்வதேச அறங்கூற்று மன்றத்தில் முறையீடு செய்யப்பட்டது. இந்த விசாரணை நடந்து வரும் நிலையில், நேற்று அறங்கூற்று மன்றத்தில் அணியமான ஸ்லோபோதன் ப்ரால்ஜக் அறங்கூற்றுவர் கண்முன்னே குப்பியில் இருந்த நஞ்சை அருந்;தினார்.

இதனையடுத்து, மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட ஸ்லோபோதன் ப்ரால்ஜக் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

பாவம் ஸ்லோபோதன் ப்ரால்ஜக்! இவர் பீத்தபையன் ராசபக்சே அளவுக்கு இல்லாமல் கொஞ்சம் மனசாட்சி உள்ளவன் போலிருக்கிறது.

-தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்தொடர்நாள் எண்: 18,69,622

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.