Show all

சீனாவில் துவைக்கும் இயந்திரத்திற்குள் சிக்கிய உரிமையாளர் தலை

சீனாவின் பியூஜின் மாகாணத்தைச் சேர்ந்த ஒருவர் தனது துவைக்கும் இயந்திரத்தில் துணிகளை துவைப்பதற்கு போட்டார்.

துவைக்கும் இயந்திரம் இயக்கினால் இயங்கவில்லை. எதோ பழுது என்று நினைத்தவர் துவைக்கும் இயந்திரத்திற்குள் தனது தலையை விட்டார்.  பின்னர் தனது தலையை வெளியே எடுக்க முயற்சித்தார். ஆனால், அவரால் தலையை வெளியே எடுக்க முடியவில்லை.

 

அவரது நண்பர்களும் முயற்சித்துப் பார்த்து முடியாமல், தீயணைப்புப் படைக்கு தகவல் கொடுத்தனர். விரைந்து வந்த தீயணைப்பு வீரர்கள் 6 பேர் தொடர்ந்து 40 நிமிடங்கள் போராடி அவரது தலையை துவைக்கும் இயந்திரத்தில் இருந்து வெளியே எடுத்தனர். துவைக்கும் இயந்திரத்தை முற்றிலும் சிறிது, சிறிதாக உடைத்தே அவரை காப்பாற்றினர். சிறிது காயங்களுடன் அவரது தலை தப்பியது.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.