Show all

நரேந்திர மோடிக்கு ஆப்பு தயாராகிறதா

 

 

     அடுத்த 15 ஆண்டுகளுக்கு நரேந்திர மோடி தான் பிரதமர். எனவே காங்கிரஸ் கவலைப்பட தேவையில்லை என நடுவண் அமைச்சர் ராம் விலாஸ் பாஸ்வான் கூறியுள்ளார்.

 

முன்னதாக  தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசு இரண்டு  ஆண்டுகள் நிறைவு கொண்டாட்டத்தை விமர்சித்து காங்கிரஸ் தலைவர் சோனியாகாந்தி பேசினார். அப்போது அவர் பிரதமர் ஒரு மன்னர் போல் செயல்படுகிறார் என்றும் காற்றுக்கு எதிர்திசையில் ஓடும் பழக்கத்தை அவர் மாற்ற வேண்டும் எனவும்  கூறியிருந்தார்.

 

அவருக்கு பதில் அளிக்கும் வகையில் செய்தியாளர்களிடம் பேசிய பாஸ்வான் அடுத்த 15 ஆண்டுகளுக்கு நரேந்திர மோடிதான் பிரதமர் எனவே காங்கிரஸ் கவலைப்பட தேவையில்லை. நாட்டு மக்களின் ஆதரவு பிரதமருக்கு இருக்கிறது. அவருக்கு எதிரான கருத்துக்களை காங்கிரஸ் பரப்பி வருகிறது என்று கூறினார்.

 

சோனியா காந்தி குறித்தும், அவரது மருமகன் வதேரா மீதான குற்றச்சாட்டுகள் குறித்தும் செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விகளுக்கு, பாஸ்வான் பதிலளிக்க மறுத்துவிட்டார்.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.