Show all

அந்த 15இலட்சம்! நைஜிரியா பாரப்பா மோடிக்கு பின்னாலே கொடுத்த வாக்குறுதியை முன்னலே காப்பத்தறாங்க

17,ஆனி,தமிழ்தொடர்ஆண்டு-5120: சுவிஸ் வங்கியில் இருக்கும் கருப்புப் பணத்தை வைத்து இந்தியர்களின் கணக்கில் தலா ரூ.15 லட்சம் போடப்படும் என்ற தேர்தல் வாக்குறுதியை பாஜக நிறைவேற்றாத நிலையில், 

சுவிஸ் வங்கியில் இந்தியர்களின் வைப்புத் தொகை இரட்டிப்பாக அதிகரித்திருக்கிற நிலையில், 

சமூக வலைத்தளங்களில் இந்திய மக்களின் கேள்விகளும், கிண்டல்களும் குவிந்து வருகின்றன.

ஆனால், சுவிஸ் வங்கியில் பதுக்கப்பட்டுள்ள பணத்தை தமது நாட்டு மக்களுக்கு பகிர்ந்தளிக்கும் திட்டத்தை செயல்படுத்த உள்ளது நைஜீரியா அரசு.

நைஜீரியாவின் முன்னாள் ராணுவ ஆட்சியாளரான சானி அபாஷா பதுக்கிய பணத்தை ஏழைக் குடும்பங்களுக்கு பிரித்து அளிக்க உள்ளதாக அந்நாட்டு அரசு கூறியுள்ளது.

300 மில்லியன் டாலரை சுவிஸ் அதிகாரிகள் திருப்பி அளித்த பிறகு இந்த மாதம், இதனை மக்களுக்கு பிரித்து அளிக்கும் பணி தொடங்க உள்ளது.

அபாஷாவால் பதுக்கப்பட்ட இந்தப் பணம், 3 லட்சம் குடும்பங்களுக்கு வழங்கப்படும். ஒவ்வொரு குடும்பமும் மாதத்திற்கு 14 டாலர் பெறும்.

நைஜீரியாவின் 36 மாநிலங்களில், 19 மாநிலங்களில் வசிக்கும் மக்களுக்கு இப்பணம் வழங்கப்பட உள்ளது.

அபாஷா ஆட்சியில் இருந்தபோது, பதுக்கப் பட்டதாகக் கூறப்பட்ட பில்லியன் கணக்கான டாலர்களில் ஒரு பகுதி, முதலில் லக்சம்பர்க் நாட்டில் சேமிக்கப்பட்டது.

மாரடைப்பினால் இருபது ஆண்டுகளுக்கு முன்பு, இறக்கும் முன்பு வரை, நைஜீரியாவை இரும்புக்கரம் கொண்டு அவர் ஆண்டு வந்தார்.

பதுக்கப் பட்ட சொத்துக்களை மீட்க உள்ளதாக மூன்றாண்டுகளுக்கு முந்தைய தேர்தல் கருத்துப் பரப்புதலின் போது (நம்ம மோடி நான்கு ஆண்டுகளுக்கு முன்னம் ஒவ்வொருவர் வங்கிக் கணக்கில் 15 இலட்சம் என்று அறிவித்தது போல) அதிபர் முஹமது புஹாரி அறிவித்தார். 

கடந்த பத்து ஆண்டுகளில், 1 பில்லியன் டாலரை நைஜீரியாவிடம் சுவிட்சர்லாந்து திரும்ப அளித்துள்ளதாக நம்பப்படுகிறது

நைஜீரியாவுக்கு பணத்தை திரும்ப அனுப்புவதில், கடுமையான நிபந்தனைகள் இருக்கும் என நைஜீரியாவுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்ட சுவிட்சர்லாந்து அதிகாரிகளில் ஒருவரான ராபர்டோ பால்சரேட்டி கடந்த ஆண்டு தெரிவித்தார்.

நைஜீரியாவில் பணம் வழங்குதல், எழை குடும்பங்களுக்கு உதவும் சமூக பாதுகாப்பு திட்டங்களில் ஒன்றாகும்.

உலக வங்கியின் மேற்பார்வையில், இந்த மாதம் முதல் சிறு சிறு தொகையாக தவணை முறையில் பணம் வழங்கப்பட உள்ளது. இதில் உலக வங்கி தொடர் தணிக்கையையும் நடத்தும்.

முதல் தவணைக்கு சரியாகக் கணக்கு காட்டவில்லை என்றால், அடுத்தடுத்த தவணைகள் நிறுத்தப்படும். பணம் மீண்டும் திருடப்படுவதை இது தடுக்கும் என பால்சரேட்டி கூறுகிறார்.

மோடி ஐயா! நீங்கள் எப்போது ஒவ்வொருவர் வங்கிக் கணக்கில் 15X2=30 இலட்சம் (அதுதான் சுவிஸ் வங்கியில் இந்தியர் வைப்பு இரட்டிப்பு ஆகி விட்டதே!) எப்போது போடுவீர்கள். 

-தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்தொடர்நாள் எண்: 18,69,835. 

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.