Show all

சீருடையுடன் மாணவர்கள் செந்தூரனின் சவப்பெட்டியை சுமந்துச் சென்று இறுதி அஞ்சலி

இலங்கையில் பயங்கரவாத தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளவர்களை விடுவிக்கக் கோரி, ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்துக்கொண்ட மாணவனுக்கு அஞ்சலி செலுத்தும்பொருட்டு வட மாகாணத்திலுள்ள பள்ளிக்கூடங்கள் இன்று மூடப்பட்டன.

பதினெட்டு வயதான, ராஜேஸ்வரன் செந்தூரன் என்ற மாணவர் தற்கொலை செய்துகொண்டார்.

வட மாகாண கல்வி அமைச்சின் உத்தரவுக்கமையவே பள்ளிக்கூடங்கள் மூடப்பட்டுள்ளன.

சிறையில் வைக்கப்பட்டுள்ள இருநூறுக்கும் அதிகமான தமிழ் அரசியல் கைதிகளை, சிங்கள அரசு உடனடினயாக விடுதலை செய்ய வேண்டும் என்று தனது புத்தகத்தில் எழுதி வைத்த பின்னரே, அவர் ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்துள்ளார்.

பள்ளிக்கூட சீருடையுடன் வந்த மாணவர்கள் பலர் செந்தூரனின் சவப்பெட்டியை சுமந்துச் சென்று தமது இறுதி அஞ்சலியை செலுத்தினர்.


மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.