Show all

தமிழர் கெத்து சுந்தர்பிச்சை! கூகுள் நிறுவனத்தில், கூடுதல் கௌரவத்துடன், கூடுதல் பொறுப்பு ஏற்கிறார்.

கூகுள் நிறுவனத்தின் தாய் நிறுவனமான ஆல்பாபட் நிறுவனத்தின் தலைமை நிர்வாகியாக சுந்தர் பிச்சை நியமிக்கப்பட்டார்.

18,கார்த்திகை,தமிழ்தொடர்ஆண்டு-5121: கூகுள் நிறுவனத்தின் தாய் நிறுவனமான ஆல்பாபட் நிறுவனத்தின் தலைமை நிர்வாகியாக சுந்தர் பிச்சை நியமிக்கப்பட்டார்.

தேடுபொறி நிறுவனம கூகுள்: இணையதளம் தொடர்பான சேவையில், உலகளவில் முன்னணியில் உள்ளது. தேடுபொறி, தரவுச்சேவை தொழில்நுட்பம், மென்பொருள் தயாரிப்பு உள்ளிட்ட பல்வேறு சேவைகளை, கூகுள் அளித்து வருகிறது. 

தகவல் தொழில்நுட்பத் துறையில், அமெரிக்காவின் முன்னணி நிறுவனங்களில் ஒன்றாக திகழும் இந்த கூகுள் நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரியாக, தமிழகத்தின், சென்னையைச் சேர்ந்த, சுந்தர் பிச்சை இயங்கி வருகிறார்.

இந்நிலையில் கூகுள் நிறுவனத்தை நிறுவியவர்களான லாரி பேஜ், மற்றும் செர்ஜி பிரைன் இருவரும் கூட்டாக வெளியிட்டுள்ள அறிவிப்பில்- கூகுள் நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி என்ற பொறுப்புடன் அதன் துணை நிறுவனமான ‘ஆல்பபெட்’ நிறுவனத்தின் தலைமை நிர்வாகியாக கூடுதலாக சுந்தர் பிச்சை கவனிப்பார். என்று தெரிவித்து, தமிழர் கெத்து சுந்தர்பிச்சைக்கு, கூகுள் நிறுவனத்தில், கூடுதல் கௌரவத்துடன், கூடுதல் பொறுப்பு வழங்கியுள்ளனர்.

-தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல, தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்த் தொடர்நாள் எண்:18,70,356.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.