Show all

இலங்கை இராணுவத்தினர் 10 தமிழக மீனவர்களைச் சிறைபிடித்தனர்

இன்று 22,புரட்டாசி,தமிழ்தொடர்ஆண்டு-5119:      சர்வதேசக் கடல் எல்லைப் பகுதியில், நெடுந்தீவு அருகே தமிழக மீனவர்கள் பத்து பேர் நேற்றிரவு மீன்பிடித்துக்கொண்டிருந்தனர். அப்போது, ரோந்துப்பணியில் ஈடுபட்டிருந்த இலங்கைக் கடற்படையினர் அங்கு வந்தனர். தமிழக மீனவர்களிடம் விசாரணை நடத்திய அவர்கள், எல்லை தாண்டி மீன் பிடித்துக்கொண்டிருக்கிறீர்கள் எனக்கூறி, அவர்கள் பத்து பேரையும் உடனடியாகக் கைதுசெய்தனர். அவர்களது படகும் சிறைபிடிக்கப்பட்டது. பின்னர், தமிழக மீனவர்களை காங்கேசன் துறை அறங்கூற்று மன்றத்தில் அணியப் படுத்துவதாக கைதுசெய்து அழைத்துச்சென்றனர்.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.