Show all

இரவில் வியர்ப்பது தலைமைத்துவமான அறிகுறியாகச் சொல்லப்படுகிறது! ஒமைக்ரான் குறுவித் தொற்றில்

ஒமைக்ரான் குறுவித் தொற்றில் முதன்மை அறிகுறி இரவில் வியர்ப்பது என்று தென் ஆப்பிரிக்கா நோயாளிகள் சொன்ன தகவலாக வெளியிடப்பட்டுள்ளது.

29,கார்த்திகை,தமிழ்த்தொடராண்டு-5123: உலகையே தற்போது அச்சத்தில் ஆழ்த்தி வரும் ஒமைக்ரான் குறுவியின் அறிகுறிகள் முதன் முதலில் எப்படி இருந்தது என்பது குறித்த தகவல் வெளியாகியுள்ளது.

தென் ஆப்பிரிக்காவில் முதன் முதலில் கண்டுபிடிக்கப்பட்ட ஒமைக்ரான் குறுவி, முன்பு இருந்த கொரோனா குறுவி பரவல்களில் இருந்து, வேறுபட்டதாக உள்ளது.

ஒமைக்ரான் ஐந்து தனித்துவமான அறிகுறிகளை காட்டுகிறது:

தொண்டையில் வலிக்கு பதிலாக ஒரு கீறல் போன்ற உணர்வு
உலர் இருமல்
மிகுந்த சோர்வு
லேசான தசை வலிகள்
இரவு நேரங்களில் வியர்ப்பது என்பன அவை.

இந்த ஒமைக்ரான் குறுவிப் பரவலை ஐயுற்ற முதன்மையாளர் தென் ஆப்பிரிக்கா மருத்துவ சங்கத்தின் தலைவர், மருத்துவர் ஏஞ்சலிக் கோட்சி, ஒமைக்ரான் குறுவி டெல்டா மாறுபாட்டிலிருந்து வேறுபட்ட அறிகுறிகளை கண்டதாக செய்தியாளர் சந்திப்பில் தெரிவித்திருந்தார்.

அவர்களுக்கு, தீவிர சோர்வு, லேசான தசை வலி, தொண்டை அரிப்பு (வலி கிடையாது) மற்றும் வறட்டு இருமல் ஆகியவை கொண்டிருந்தனர்.

முந்தைய கொரோனா குறுவிகளைப் போன்று, இந்த ஒமைக்ரானால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சுவை மற்றும் வாசனை இழப்பு தன்மை ஏற்படவில்லை.

இரவு நேரத்தில் தூங்கும் போது, இவர்களுக்கு அதிக நேரம் வியர்த்துள்ளது. இதனால் உடை ஈரமாகியுள்ளது, போன்ற மாறுதல்கள் தான் கண்டுபிடிக்கப்பட்டது.

மேலும், தென்னாப்பிரிக்காவின் நலங்குத் துறையால் கூட்டப்பட்ட ஒரு மாநாட்டில், ஒமைக்ரான நோயால் பாதிக்கப்பட்ட பல நோயாளிகள் சொன்ன ஒரே அறிகுறி இரவில் வியர்ப்பது தான் என்று கூறியுள்ளார். 
-தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்த்தொடர்நாள் எண்: 18,71,098.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.