Show all

இத்தாலியில் ஒலித்த தமிழ்த்தாய் வாழ்த்து! பெருமைக்குரிய தருணம் என்றும் அமைச்சர் மனோ தங்கராசு கீச்சுப்பதிவு

இத்தாலியில் தமிழ்த்தாய் வாழ்த்து பாடப்பட்டது பெருமைக்குரிய தருணம் என்று இத்தாலி சென்றுள்ள அமைச்சர் மனோ தங்கராசு கீச்சுவில் பதிவிட்டுள்ளார்.

01,வைகாசி,தமிழ்த்தொடராண்டு-5124: தமிழ்நாட்டைச் சேர்ந்த மறைசாட்சி தேவசகாயத்திற்கு புனிதர் பட்டம் வாடிகனில் இன்று நடைபெற உள்ளது. இது தொடர்பான அறிமுக நிகழ்ச்சி ஒன்றில் தமிழ்த்தாய் வாழ்த்து பாடப்பட்டது.

இக்காட்சிகளை அங்கு சென்றுள்ள தமிழ்நாட்டு அமைச்சர் மனோ தங்கராஜ் கீச்சுப் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். இத்தாலியில் தமிழ்த்தாய் வாழ்த்து பாடப்பட்டது பெருமைக்குரிய தருணம் என்றும் அமைச்சர் பதிவிட்டுள்ளார். 
-தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்த்தொடர்நாள் எண்: 18,71,249.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.