Show all

பழ.நெடுமாறன் அவர்கள் சொல்வது உண்மையா! பிரபாகரன் நலமுடன் உள்ளார்; உரிய நேரத்தில் வெளிவருவார்

28,புரட்டாசி,தமிழ்தொடர்ஆண்டு-5120: தமிழர் தேசிய முன்னணி தலைவர் பழ.நெடுமாறன் நேற்று ராமநாதபுரத்தில் செய்தியாளர்களிடம் பேசுகையில், இலங்கை கடற்படையினரால் பிடித்துச் செல்லப்பட்ட தமிழக மீனவர்களின் படகுகளில் சுமார் 150 படகுகள் மீண்டும் பயன்படுத்த முடியாத நிலையில் சேதமடைந்து மூழ்கிக் கிடக்கின்றன. அவற்றை மீட்டு வருவதை விட அந்த படகுகளுக்கு இலங்கை அரசிடம் இருந்து இழப்பீட்டுத் தொகையினை பெற்றுத் தருவதே சிறந்ததாகும். அல்லது நடுவண் அரசு அந்தத் தொகையினை மீனவர்களுக்கு வழங்க வேண்டும். 

தமிழகத்தில் பேச்சுரிமை, எழுத்துரிமை, கருத்துரிமை உள்ளிட்டவை முற்றிலுமாக பறிக்கப்பட்டு வருகிறது. இலங்கையில் தமிழர்களின் வாழ்வாதாரம் இன்னும் சீர் செய்யப்படவில்லை. இதனால் அங்கு மக்கள் போராட்டம் நடத்தத் தொடங்கியுள்ளனர். இதுபோன்ற பிரச்சனைகள் தொடர்வதால், அங்கு தமிழீழம் அமைய வேண்டும் என்ற போராட்டம் வெடிக்கும். விடுதலைப் புலிகள் இயக்கத் தலைவர் இறுதிக் கட்ட போரில் கொல்லப்படவில்லை. அவர் நலமுடன் இருந்து வருகிறார். இலங்கை தமிழர்களின் உரிமை போராட்டக் களத்தில் உரிய நேரத்தில் வெளிப்படுவார் பிரபாகரன் என்றார்.

-தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்தொடர்நாள் எண்: 18,69,940.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.