Show all

திரும்பியது புவிக்கு! நிலவுக்குப் போன நாசாவின் ஓரியன் விண்கலம்

நிலவுக்கு மனிதரை அனுப்ப நாசாவின், ஆர்டெமிஸ் என்கிற மூன்றாண்டுத் திட்டத்தில், சோதனை முயற்சியாக நிலவுக்கு அனுப்பப்பட்ட அமெரிக்க 'ஓரியன்' விண்கலம் பூவிக்கு திரும்பியது.

27,கார்த்திகை,தமிழ்த்தொடராண்டு-5124: அமெரிக்க விண்வெளி நிறுவனமான நாசா நிலவுக்கு மனிதரை அனுப்ப ஆர்டெமிஸ் என்கிற மூன்றாண்டுத் திட்டத்தை தொடங்கியுள்ளது. இந்தத் திட்டத்தின் கீழ் மனிதர்களை நிலவுக்கு கொண்டு செல்ல 'ஓரியன்' என்கிற விண்கலத்தை நாசா உருவாக்கியுள்ளது. 

சோதனை முயற்சியாக ஆளில்லா ஓரியன் விண்கலத்தை நிலவுக்கு அனுப்ப நாசா திட்டமிட்ட நிலையில், விண்கலவில்லில்;  ஏற்பட்ட தொழில்நுட்ப கோளாறுகளால் அந்த முயற்சி பலமுறை ஒத்திவைக்கப்பட்டது. இறுதியில் நாளது 30,ஐப்பசி,தமிழ்த்தொடராண்டு-5124 (16.11.2022) அன்று ஆர்டெமிஸ்-1 விண்கலவில் மூலம் 'ஓரியன்' விண்கலம் வெற்றிகரமாக நிலவுக்கு அனுப்பப்பட்டது. 

பின்னர் விண்கலவில்லில் இருந்து பிரிந்த 'ஓரியன்' விண்கலம் நிலவை நோக்கி தனது பயணத்தை மேற்கொண்டது. 6 நாட்கள் பயணத்துக்கு பின் 'ஓரியன்' விண்கலம் நிலவின் சுற்றுவட்டப் பாதையை அடைந்தது. சுமார் 26 நாட்கள் நிலவின் சுற்றுவப்பட்டப்பாதையில் சுற்றி வந்த 'ஓரியன்' விண்கலம் தனது பயணத்தை முடித்துக்கொண்டு முந்தாநாள் பூவிக்குப் புறப்பட்டது. பூவியின் வளிமண்டலத்தில் நுழைந்த விண்கலம் பசிபிக் பெருங்கடல் பகுதியில் பாதுகாப்பாக தரையிறங்கியது.
-தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்த்தொடர்நாள் எண்: 18,71,461.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.