Show all

தெரிவிப்பது என்ன! 2தடுப்பூசி செலுத்திக் கொண்ட கமலுக்குக் கொரோனா- ஓமைக்ரான்- என்று வரும் செய்திகள்

இரண்டு தடுப்பூசி செலுத்திக் கொண்ட கமலுக்கு, அமெரிக்கா சென்று வந்ததில் கொரோனா- தென் ஆப்பிரிக்காவில், புதிய உருமாறிய கொரோனா- என்று வரும் செய்திகள் தெரிவிப்பது என்ன? என்பதற்கான அலசலே இந்தக் கட்டுரை.

12,கார்த்திகை,தமிழ்த்தொடராண்டு-5123: பதினோராவது பேரளவு கொரோனா தடுப்பூசி முகாம் என்று தமிழ்நாடும், நூறுகோடி தடுப்பூசி செலுத்திவிட்டோம் என்று இந்தியாவும் ஒரு பக்கம் நிறைவு அடைகின்ற வேளையில்-  இரண்டு தடுப்பூசி செலுத்திக் கொண்ட கமலுக்கு, அமெரிக்கா சென்று வந்ததில் கொரோனா- தென் ஆப்பிரிக்காவில், புதிய உருமாறிய கொரோனா- என்று வரும் செய்திகள் நம்முடைய உறுதியை குலைக்கும் வகைக்கானதாக அமைகிறது.

கொரோனா, தடுப்பூசி செலுத்தியவருக்கும் கொரோனா, உருமாறிய கொரோனா என்பவையெல்லாம்-  யாருக்கு உறுதியாக இல்லவேயில்லை என்றால்- கொரோனா பாதித்தவரோடு தொடர்பில் இல்லாத தனி மனிதர், குடும்பம், தெரு, கிராமம், ஊர், நகரம், மாவட்டம், நாடு என்கிற அனைவருக்கும் அச்சமே இல்லை என்பது உறுதியான உண்மை.

தமிழ்நாடு தவிர்த்து, காலம் காலமாக, எல்லா நாடுகளும்- அதிகாரத்தையும், நிருவாகத்தையும் ஒன்றைத் தளத்தில் குவித்து- மக்கள் அனைவரும், எப்போதும் நாடோடிகளாக அலைந்து திரியும் வகைக்கு சட்ட சமூக நிருவாக அமைப்புகளை முன்னெடுத்து வருவதே மிக எளிதாக கொரோனா போன்ற தொற்று உலகளாவி அனைவரையும் தாக்குவதற்கு காரணமாகிறது. 

அதிகாரத்தை நிருவாகத்தைப் பரவலாக்குவதே- டெல்லியில் மாசு, இரண்டு ஆண்டுகளாகத் தொடரும் கொரோனா, உருமாறிய கொரோனா, போக்குவரத்து நெருக்கடி, பெட்ரோல் டீசல் வகைக்கு அதிகப்படியான செலாவணி இழப்பு, இப்படி பல்லாயிரம் சிக்கல்களுக்குத் தீர்வாக அமைய முடியும்.

உலக மொழிகள் எல்லாமே தங்கள் மொழியை அடிப்படையான கட்டமைப்புகளோடு வளர்ப்பதற்கு முன்னாலேயே அடுத்த மொழியைச் சந்திக்க வேண்டிய நிலை அம்மொழிகளுக்கு அமைந்தது. காரணம் உலகினர் எல்லோருமே ஆற்றங்கரையைத் தேடி நாடோடி வாழ்க்கை மேற்கொண்டவர்கள்தாம். 

ஆகவே உலக மொழிகள் அனைத்திலும்  கொரோனா போல சில மொழிகளின் நேரடியான சொற்களும், திரிபடைந்த கொரோனா போல, பற்பல மொழிகளின் பற்பல சொற்களும், மிகுதியாகவே காணப்படும். உலகில் தமிழ் தவிர்த்து- இது மூலமொழி என்று சொல்லிக் கொள்வதற்கு ஒரு மொழியும் இல்லை.

ஆனால் தமிழ்மொழியோ சங்கம் கண்டு உறுதியான கட்டமைப்பில் வளரும் வரை பிறமொழிகள் இருப்பதை அறியாமலேயே தனித்து வளர்ந்து கொண்டிருந்தது. காரணம் தமிழர் முப்புறம் கடல் சூழ்ந்து நான்காவது புறம் உலகப் பெருமலை அமையப்பெற்ற நாவலந்தேயம் என்ற பெரும்பகுதியை கொண்டிருந்ததும், தமிழர் ஆற்றங்கரை ஆற்றங்கரை என்று தேடி அலையாமல், தாம் வாழ்ந்த நிலம் நாடாக இருந்தாலும், காடாக இருந்தாலும் மேடாக இருந்தாலும், தாழ்வான பள்ளமாக இருந்தாலும் அதனை வாழுமிடமாக்கிக் கொள்ளும் இயல்பினராய் இருந்தனர் என்பதும் ஆகும்.

குறிஞ்சி முல்லை மருதம் நெய்தல் பாலை என்கிற தமிழர்தம் நிலப்பகுப்பும்-
நாடாகொன்றோ காடாகொன்றோ
அவலாகொன்றோ மிசையாகொன்றோ
எவ்வழி நல்லவர் ஆடவர்
அவ்வழி நல்லை வாழிய நிலனே. 
என்கிற புறநானூற்றுப் பாடலும் இதற்கான சான்றுகள்.

உலக இனங்கள் அனைத்திலுமே தமிழருக்கு மட்டுமே நாடு பிடித்து அடுத்த மண்ணில் தம்மக்களை குடியமர்த்தும்  எண்ணம் இருந்ததான வரலாறு இல்லை. இதனாலும் தமிழுக்கு அடுத்த மொழிக்கான தொடர்பு நீண்ட நெடுங்காலம் கிட்டாமலே போனது.

இதனால் உலகில் உள்ள அத்தனை ஆயிரம் மொழிகளிலும் தமிழ்மொழி ஒன்று மட்டுமே மிக நீண்ட காலம் எந்த அயல்மொழிகளின் தாக்கமும் இல்லாமல் வளர்ந்த மொழியாகும். 

உலகத்தில் இருக்கிற அத்தனை மொழி ஆய்வாளர்களும், தமிழ் குறித்த ஆய்வில், ஆழமாக இறங்கும்போது, தடுமாறிப் போவார்கள். தங்கள் மொழியோடு உலக மொழிகளுக்கெல்லாம் பலவகையான தொடர்புகள் இருக்கும்போது, இந்தத் தமிழ்மொழி மட்டும் தனித்து காணப்படுகிறதே என்று குழம்பிப் போவார்கள். 

உலக மொழியியல் அறிஞர்கள் அனைவரும் உலக மொழிகளில் தமிழ்மொழி குறித்து மட்டும் ஒரே மாதிரியான ஒருமித்த முடிவுக்கு வரமாட்டார்கள்; யானையைத் தடவிப்பார்த்த கண்பார்வை மாற்றுத் திறனாளிகள் போல இதுவரை வௌ;வேறு முடிவுகளையே தந்து வந்து கொண்டிருக்கின்றார்கள்.   

தமிழ் நான்கு வளர்ந்திருந்த காலக்கட்டத்தில் பல கூட்டங்களாக, இமயமலைக் கணவாய்கள் வழியாக, நுழைந்திருந்த ஆரியர்கள், தாம் அப்போது பேசிவந்த பல்வேறு மொழிகளுக்கான எழுத்து வகைமையை- தமிழைப்போல எழுத்தைக் கூட்டினால் சொல் வரும் வகையில் அமைத்துக் கொண்டார்கள். 

ஆனால் ஆரியர்கள் பேசி வந்த ஈரானிய ஆப்கானிய மொழிகளுக்கு எல்லாம் எழுத்தைக் கூட்டி ஒலித்தால் சொல்வரும் அமைப்புக்கு எழுத்துக்கள் இன்று வரை கிடையாது. 

உலக மொழிகளில், தமிழைத் தவிர எந்த மொழியிலும், அ ம் மா என்று எழுத்தைக் கூட்டி ஒலித்தால் சொல்வராது. அம்மாவுக்கு எ எம் எம் எ என்பது போல அந்தந்த மொழிகளின் அத்தனைச் சொற்களுக்கும் ஒரேயொருமுறையாவது ஒவ்வொரு சொல்லுக்கும் அமைக்க வேண்டிய எழுத்தைக் (ஸ்பெல்லிங்) கற்றாக வேண்டும்.

இந்தியாவில் ஆரியர்கள் பேசி வந்த மொழிகளின் குடும்ப மொழிகளாக உருவான அத்தனை மொழிகளும், தங்கள் மொழிகளுக்கான எழுத்து வகைமையை- தமிழைப்போல எழுத்தைக் கூட்டினால் சொல் வரும் வகையில் அமைத்துக் கொண்டார்கள். 

ஆரிய மொழிகளின் தாக்கத்தால் தமிழிலிருந்து பிரிந்த தென்னக மொழிகளும் ஆரிய மொழிகளை ஒட்டியே தங்கள் மொழிகளுக்கான எழுத்து வகைமையை- தமிழைப்போல எழுத்தைக் கூட்டினால் சொல் வரும் வகையில் அமைத்துக் கொண்டார்கள். உலகில் எழுத்தைக் கூட்டினால் சொல் வரும் மொழிகளை- முப்புறமும் கடலும் நான்காவது புறம் பெருமலையும் பாதுகாப்பாக அமைந்த நாவல 'ந்தேய' ம் என்று தமிழர் அறிமுகப்படுத்த ஐரோப்பியர் ந்தேயா என்று ஒலித்துப் பதிவு செய்து கொண்ட இந்தியாவில் மட்டுமே காண முடியும். 

உலக இனங்கள் அனைத்திற்கும் தனிமனித சான்றோர்கள் முன்னெடுத்த மதங்களே அடிப்படை. ஆனால் உலகில் தமிழர்களுக்கும் மட்டும் தனிமனித சான்றோர் முன்னெடுத்த மதம் கிடையாது. மாறாக சங்கம் கண்ட தமிழ் அறிஞர்களின் கூட்டுச் சிந்தனையில் விளைந்த பொருள் இலக்கணம் உண்டு. இப்படி தமிழ்மொழிக்கு மட்டுமேயான தனித்துவத்தை எழுத முனைந்தால் சிறப்பான ஒரு புத்தகமே வடிக்கிற அளவுக்கு சொல்லிக் கொண்டே போகலாம்.

தமிழ்நாட்டை ஆண்டவர்கள் கூட சேர, சோழ, பாண்டியர், கடையேழு வள்ளல்கள் போன்ற குறுநில மன்னர்கள் என்பதாக அதிகாரமும் நிருவாகமும் தாராளமாக பகிர்ந்து கொள்ளப்பட்ட நிலையில். தமிழ்! கொரோனா போன்று எந்தப் பிறமொழித் தாக்கத்தாலும் பாதிக்கபடாது இன்றும் நிமிர்ந்து நிற்கிறது. 

இனி இந்த திரிபடைந்த கொரோனா பற்றிய செய்திக்கு வருவோம்:

கொரோனா குறுவி ஒப்பீட்டளவில் புதிய குறுவி என்பதால் அது குறித்த ஆய்வு உலகெங்கும் நடைபெற்று வருகிறது. இந்தக் குறுவி தொடர்ந்து உருமாறிக் கொண்டே இருப்பதால் இதைச் சமாளிப்பது கடினமான விடையமாக மாறியுள்ளது. 

கடந்த இரண்டு ஆண்டுகளில் ஆல்பா, பீட்டா, டெல்டா என பல்வேறு உருமாறிய கொரோனா வகைகள் கண்டறியப்பட்டுள்ளன. 

கொரோனா குறுவிப் பரவல் தொடங்கியதில் இருந்தே தென்னாப்பிரிக்காவில் உள்ள ஜீனோமிக்ஸ் கண்காணிப்பு மையம் இந்தக் குறுவியில் ஏற்படும் மாற்றங்களைத் தொடர்ந்து கண்காணித்து வருகிறது. 
இந்தக் குறுவி பாதிப்பு எப்படிப் பரவுகிறது என்பதைப் புரிந்து கொள்ள இந்த ஆய்வு பெரியளவில் உதவுகிறது. கடந்த ஆண்டு இறுதியில் இந்த மையம் தான் பீட்டா உருமாறிய கொரோனாவை முதலில் கண்டறிந்தது. 

இது குறித்து தென்னாப்பிரிக்காவின் சில முதன்மை ஆய்வாளர்கள் கலந்துரையாடல் தளத்தில் தங்கள் கருத்துகளைப் பதிவு செய்துள்ளனர். புதிய உருமாறிய கொரோனாவை கண்டறிய கடும் முயற்சி தேவை. 

தென்னாப்பிரிக்கா மற்றும் பிரிட்டன் ஆகிய இரண்டு நாடுகள் மட்டுமே கடந்தாண்டு தொடக்கத்தில் உருமாறிய கொரோனா வகையைக் கண்காணிக்கத் தேவையான நடவடிக்கைகளை எடுத்தன. கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் முழு மரபணு வரிசைகளை ஆய்வு செய்வதன் மூலம் உருமாறிய கொரோனாவை கண்டறிய முடியும். 

உலகின் மற்ற பகுதிகளில் கண்டறியப்பட்ட கொரோனா வகைகளுடன் இதை ஒப்பிட்டு புதிய உருமாறிய கொரோனா வகைகள் கண்டறியப்படும். எதில் அதிக மாறுபாடுகள் உள்ளனவோ, அது குறித்து ஆய்வு செய்து, உலக நலங்கு அமைப்புக்குத் தகவல் அளிக்கப்படும். 

இதுபோன்ற ஆய்வுகளை மேற்கொள்ளத் தேவையான வசதிகள் தென்னாப்பிரிக்காவில் உள்ளது. தென்னாப்பிரிக்காவில் உள்ள பல ஆய்வகங்களில் குறுவிகளை வளர்க்கவும் ஆய்வு செய்யவும் முடியும். 

தடுப்பூசிகள் புதிய கொரோனா பாதிப்புக்கு எதிராக எந்தளவு செயல்படுகிறது என்பது குறித்தும் ஆய்வு செய்ய முடியும். முதலில் பீட்டா கொரோனா பாதிப்பு இங்குக் கண்டறியப்பட்டது. அது தான் தென்னாப்பிரிக்காவில் 2ஆவது அலையை ஏற்படுத்தியது. 

அதன் பிறகு கண்டறியப்பட்ட டெல்டா கொரோனா தென்னாப்பிரிக்காவில் 3ஆவது அலையை ஏற்படுத்தியது. 

கடந்த சில நாட்களுக்கு முன்னர் தான் புதிய உருமாறிய கொரோனா குறித்துக் கண்டறியப்பட்டது. 77 பேருக்கு இந்தக் குறுவி பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. போட்ஸ்வானா மற்றும் ஹாங்காங் நாடுகளிலும் இந்தக் குறுவி கண்டறியப்பட்டுள்ளது. இது குறித்துக் கூடுதல் ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. 

பலவீனமான நோயெதிர்ப்பு சக்தி உடையவர்களால் கொரோனா குறுவியை அழிக்க முடிவதில்லை. இதனால் அவர்கள் உடலில் நீண்ட காலம் இருக்கும் கொரோனா, உருமாறத் தொடங்குகிறது. தென்னாப்பிரிக்காவில் எய்ட்ஸ் நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்குப் பல ஆண்டுகளாகச் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. அவர்களிடையே நோயெதிர்ப்பு சக்தி குறைவாக இருக்கலாம். இதன் மூலமும் உருமாறிய கொரோனா ஏற்படும் வாய்ப்பு உள்ளது. இது குறித்தும் ஆய்வு செய்து வருகிறது. 

இந்தப் புதிய உருமாறிய கொரோனா ஆபத்தானதா என்பது குறித்து இப்போது நமக்குத் தெரியாது. இதில் உள்ள சில மாறுபாடுகள் கவலை கொள்ளச் செய்கிறது. அதில் மாற்றுக்கருத்தில்லை. 

இதுவரை கண்டறியப்பட்ட எந்த உருமாறிய கொரோனாவின் புரோத ஸ்பைக்கிலும் 30க்கும் மேற்பட்ட மாறுபாடுகள் இருந்ததில்லை. புரோத ஸ்பைக்கை குறிவைத்தே பெரும்பாலான தடுப்பூசிகள் தயாரிக்கப்பட்டுள்ளதால் இது கவலை கொள்ளச் செய்கிறது. 

தற்போது வரை கண்டறியப்பட்டுள்ள உருமாறிய கொரோனா வகைகளில் இருந்து இது முற்றிலும் மாறுபட்ட ஒன்றாகவே உள்ளது. இது பீட்டா அல்லது டெல்டா கொரோனாவின் மற்றொரு வகை இல்லை. இது புதிய வகை கொரோனா என்பதால் இது குறித்து உறுதியாக எதுவும் கூற முடியாது. இந்தக் குறுவி குறித்து தொடர்ந்து ஆய்வுகள் நடைபெறுகிறது. இது எந்தளவு தீவிர பாதிப்பை ஏற்படுத்துகிறது, எவ்வளவு வேகமாகப் பரவுகிறது, தடுப்பூசியில் இருந்து தப்பும் ஆற்றல் உள்ளதா என்பன குறித்து ஆய்வுகள் செய்யப்படுகிறது. 

முதலில் இந்த உருமாறிய கொரோனா குறுவி எந்தளவு வேகமாகப் பரவுகிறது என்பது குறித்து ஆய்வு செய்யப்படும். அடுத்து இது ஏற்கனவே தடுப்பூசி போட்டவர்கள் அல்லது கொரோனாவில் இருந்து குணமடைந்தவர்களை எப்படிப் பாதிக்கிறது என்பது குறித்தும் ஆய்வு செய்யப்படும். அதன் பின்னரே இந்த உருமாறிய கொரோனா குறித்து உறுதியாகக் கூற முடியும் என்று ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர். 

தென்னாப்பிரிக்காவில் அந்த குறிப்பிட்ட பகுதியில் உருமாறிய கொரோனா பாதிப்பு அதிகரித்துள்ளது. இதனால் எங்கு அடுத்த அலை ஏற்படுமோ என்ற அச்சமும் ஏற்பட்டுள்ளது. ஆனால், தற்போது நம்மிடம் இருக்கும் தகவல்களை வைத்து உறுதியாக எதுவும் கூற முடியாது என ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர். 

அதேபோல தற்போதுள்ள தடுப்பூசிகள் இந்த புதிய உருமாறிய கொரோனாவுக்கு எதிராக வேலை செய்யுமா, எந்தளவு வேலை செய்யும் என்பது குறித்தும் உறுதியாகச் சொல்ல முடியாது. தடுப்பூசி போட்டவர்களுக்கு நடுவிலும் கூட இந்த உருமாறிய கொரோனா கண்டறியப்பட்டுள்ளது. 

இருப்பினும், கொரோனா தடுப்பூசிகள் குறுவிப் பரவலைக் கட்டுப்படுத்துவதில்லை என நமக்குத் தெரியும். அது தீவிர பாதிப்பையும் உயிரிழப்புகளையும் மட்டுமே குறைக்கிறது. எனவே இதிலும் உறுதியாக எதையும் கூற முடியாது. 

தற்போது வரை உலகிலுள்ள அனைவருக்கும் தடுப்பூசி செலுத்துவதே இந்தக் குறுவி பாதிப்பைத் தடுக்கும் ஒரே வழியாகப் பார்க்கப்பட்டு வருகிறது.
-தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்த்தொடர்நாள் எண்: 18,71,081.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.