Show all

ஒமிக்ரான் குறித்து! அஞ்சவேண்டியதில்லை என்று அனுபவத் தகவலை வெளியிட்டுள்ளது தென் ஆப்பிரிக்கா

ஒமிக்ரான் குறுவி தற்போது பல்வேறு உலக நாடுளை அச்சுறுத்தி வருகின்றது. இதையொட்டி உலகெங்கும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தீவிரமாக்கப்பட்டுள்ளன. இந்த நிலையில் அஞ்சவேண்டியதில்லை என்று அனுபவத் தகவலை வெளியிட்டுள்ளது தென் ஆப்பிரிக்கா.

08,மார்கழி,தமிழ்த்தொடராண்டு-5123: கொரோனாவில் இருந்து உருமாறிய புதிய வகை ஒமிக்ரான் குறுவி (வைரஸ்) தொடர்பில் தென் ஆப்பிரிக்கா வெளியிட்டுள்ள செய்தி மக்களுக்கு ஆறுதல் அளிக்கும் விதமாக அமைந்துள்ளது.

சீனாவில் உள்ள உகான் நகரில் தோன்றிய கொரோனா இன்றுவரை ஓய்ந்தபாடில்லை. இந்நிலையில் கொரோனாவில் இருந்து ஒமிக்ரான் என்கின்ற புதிய குறுவி உருமாறியுள்ளது. இந்தக் குறுவி தென் ஆப்பிரிக்கா நாட்டில் தான் முதலில் கண்டறியப்பட்டது.

இந்த ஒமிக்ரான் குறுவி தற்போது பல்வேறு உலக நாடுளை அச்சுறுத்தி வருகின்றது. இதையொட்டி உலகெங்கும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தீவிரமாக்கப்பட்டுள்ளன.

இந்நிலையில் தென் ஆப்ரிக்க நாட்டின் தொற்று நோய்கள் ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், ஒமிக்ரான் குறுவியால் பாதிக்கப்படும் தென் ஆப்பிரிக்கர்களில் எண்பது விழுக்காட்டினருக்கு பேருக்கு மருத்துவமனை சிகிச்சை தேவைப்படாது என்றும்,

இருப்பினும் மருத்துவமனையில் அனுமதிக்கப்படும் சூழலுக்கு வரும் நோயாளிகளுக்கு மற்ற திரிபுகளால் ஏற்படும் ஆபத்திற்கு இணையான ஆபத்தும் அச்சுறுத்தலும் இருக்கும் என்றும்,

ஒமிக்ரான் கண்டறியப்பட்டதில் இருந்து பரவல் மிக மிக அதிகமாக இருக்கிறது. அந்த வகையில் டெல்டாவுடன் ஒப்பிடும்போது ஒமிக்ரான் குறுவியால் பாதிப்பு எண்பது விழுக்காட்டிற்கும் குறைவு என தெரிவிக்கப்பட்டுள்ளது.    
-தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்த்தொடர்நாள் எண்: 18,71,106.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.