Show all

மோடி அரசின் ஆதரவு மியான்மர் அரசுக்குத்தானா

வங்காளதேச பிரதமருடனான சந்திப்பில் ரோஹிங்யா விவகாரம் குறித்து சுஷ்மா சுவராஜ் பேசவில்லை என்று வெளியுறவுத்துறை விளக்கம் அளித்துள்ளது.

     அமெரிக்காவின் நியூயார்க் நகரில் நடைபெற்று வரும் ஐ.நா அவை மாநாட்டில் கலந்து கொள்வதற்காக நடுவண் வெளியுறவு அமைச்சர் சுஷ்மா சுவராஜ் அங்கு சென்றுள்ளார்.

     இந்தக் கூட்டத்தில் கலந்து கொள்வதற்காக வந்துள்ள வங்காளதேச பிரதமர் ஷேக் ஹசீனாவை  சுஷ்மா சந்தித்து பேசினார். இந்த சந்திப்பு குறித்து விளக்கம் அளித்துள்ள வெளியுறவுத்துறை  அமைச்சகம்,

வங்காளதேச பிரதமருடனான சுஷ்மா சுவராஜின் சந்திப்பு மரியாதை நிமித்தமானது எனவும், ரோஹிங்யா விவகாரம் குறித்து இந்த சந்திப்பின் போது பேசப்படவில்லைஎனவும் தெரிவித்துள்ளது.

     மோடி அரசை பொறுத்தவரை அவர்கள் ஆதரவு மியான்மர் அரசுக்குத்தான் என்பதை மீண்டும் மீண்டும் நிரூபித்து வருகிறார்கள்.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.