Show all

மு.க.ஸ்டாலினுக்கு அழைப்பு! ஜெனீவாவில் நடைபெறும் ஐ.நா மனித உரிமை ஆணையக் கூட்டத்தில் பங்கேற்க

அடுத்த மாதம் ஜெனீவாவில் நடைபெறும் ஐ.நா மனித உரிமை ஆணையக் கூட்டத்தில் பங்கேற்க மு.க.ஸ்டாலினுக்கு அழைப்பு வந்துள்ளது.

10,ஆவணி,தமிழ்தொடர்ஆண்டு-5121: ஐக்கிய நாடுகள் அவையின் மனித உரிமைகள் ஆணையக் கூட்டம் வரும் 23,ஆவணி,தமிழ்தொடர்ஆண்டு-5121 (09.09.2019) முதல் தொடர்ந்து பதினெட்டு நாட்கள் நடக்கவிருக்கிறது. ஜெனீவாவில் நடைபெறும் இந்த கூட்டத்தில், பல்வேறு நாட்டு தலைவர்களுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. 

அந்த வகையில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலினும் அழைக்கப்பட்டுள்ளார். இந்தக் கூட்டத்தில் உலக நாடுகளில் நடைபெறும் மனித உரிமை மீறல்கள் குறித்தும், அதற்கான தீர்வுகள் குறித்தும் விவாதிக்கப்படும். 

இந்நிலையில் இந்தக் கூட்டத்தில் மு.க.ஸ்டாலின் கலந்து கொள்வார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அவ்வாறு கலந்து கொண்டால், ஈழத் தமிழர்கள் விவகாரத்தில் தற்போதைய நிலை, காஷ்மீரில் அதிரடியாக மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகள் உள்ளிட்டவை குறித்து மு.க.ஸ்டாலின் விவாதிப்பார் என்று கூறப்படுகிறது. இதுதொடர்பான அறிவிப்பை திமுக விரைவில் வெளியிடும் என்று எதர்பார்க்கப் படுகிறது.

-தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல, தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்த் தொடர்நாள் எண்:18,70,257.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.