13,மாசி,தமிழ்தொடர்ஆண்டு-5120: வங்க தேசத்தின் தலைநகர் டாக்காவில் இருந்து சிட்டாகாங்க் வழியாக துபாய் செல்லும் விமானம் புறப்பட்டது. சிட்டாகாங்கில் உள்ள ஷா அமானத் சர்வதேச விமானநிலையத்தில் இருந்து விமானம் புறப்பட தயாரான நிலையில் பயங்கரவாதிகள் விமானத்தை கடத்துவதாக தகவல் பரவியது. இதையடுத்து விமானத்தில் இருந்த 142 பயணிகளும் பத்திரமாக வெளியேற்றப்பட்டனர். விமானத்தை கடத்த முயன்ற துப்பாக்கி ஏந்திய நபரை காவல்துறையினர் கைது செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. விமானம் கடத்தும் செய்திகளை கொஞ்ச நாட்களாக கேட்காமல் இருந்தோம், தொடங்கி விட்டதா என்று அங்கலாய்க்கிறார்கள் மக்கள். -தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்த் தொடர்நாள் எண்: 18,70,074.
மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.