Show all

பாதுகாப்பு அம்சங்களை மேம்படுத்துகிறது முகநூல்! இந்தியத் தேர்தலைக் கருத்தில் கொண்டு

08,பங்குனி,தமிழ்தொடர்ஆண்டு-5119: இந்தியா மற்றும் பிரேசில் நாடுகளில் தேர்தல்களில் நேர்மைத் தன்மையை உறுதி செய்யும் வகையில் முகநூல் தளத்தில் பாதுகாப்பு அம்சங்கள் மேம்படுத்தப்படுகிறது என்று கூறிஉள்ளார் மார்க் ஜூக்கர்பெர்க்.

முகநூல் பயன்படுத்தும் சுமார் 5 கோடி பேரைப் பற்றிய விவரங்கள் ஒரு செயலி மூலம் திருடப்பட்டு, கேம்பிரிட்ஜ் அனாலிட்டிகா என்ற அரசியல் கருத்துப் பரப்புதல், நிறுவனத்திடம் பகிர்ந்து கொள்ளப்பட்டதாக தகவல் வெளியாகியது. அமெரிக்க தேர்தலில் டொனால்டு டிரம்ப் வெற்றிக்காக பணியாற்றிய கேம்பிரிட்ஜ் அனாலிட்டிகா மோசடி செயலில் ஈடுபட்டதாக தெரியவந்து உள்ளது. இதுபோன்று பிற முதன்மைத் தேர்தல்களிலும் கேம்பிரிட்ஜ் அனாலிட்டிகா தன்னுடைய கைவரிசையை காட்டி உள்ளது எனவும் குற்றம் சாட்டப்படுகிறது. கேம்பிரிட்ஜ் அனாலிட்டிகாவை தன்னுடைய தளத்தில் இருந்து முகநூல் நீக்கிவிட்டது.

இந்தியர்களின் தகவல்கள் விவகாரத்தில் முகநூல் நிறுவனம் சமரசம் செய்துக் கொண்டது என்பது தெரியவந்தால், கடுமையான நடவடிக்கையை எடுக்கப்படும், முகநூல் நிறுவனர் மார்க் ஜூக்கர்பெர்க்கிற்கு சம்மன் விடுப்போம், என இந்தியா எச்சரிக்கை விடுத்து உள்ளது.

இந்தியாவில் தேர்தல் நடைபெற உள்ள இந்நிலையில் பாதுகாப்பு அம்சங்களை முகநூல் மேம்படுத்துகிறது என மார்க் ஜூக்கர்பெர்க் கூறிஉள்ளார்.

தி நியூயார்க் டைம்ஸ் செய்தி நிறுவனத்திற்கு பேட்டியளித்து பேசிய முகநூல் நிறுவனர் மார்க் ஜூக்கர்பெர்க், செய்திகளைக் கட்டுப்படுத்தும், தேர்தல்களில் செல்வாக்கை முன்நிறுத்த் முயற்சிக்கும் கணக்குகளை கண்டுபிடிக்க முகநூல் செயற்கை நுண்ணறிவு செயலிகளை பயன்பாட்டுக்கு கொண்டு வந்து உள்ளது. இதுபோன்ற தொரு செயலில் கடந்த ஆண்டு பிரேசில் தேர்தலின்போது பயன்படுத்தப்பட்டது. அமெரிக்க தேர்தலில் ஆதிக்கம் செலுத்தும் வகையிலான தந்திரோபாயங்களை பயன்படுத்த முயன்ற ரஷிய தரவுகளுடன் தொடர்புடைது என நம்பப்படும் சுமார் 30 ஆயிரத்திற்கும் மேற்பட்ட போலி கணக்குகள் அடையாளம் காணப்பட்டன. அதற்கு பின்னதாக நாங்கள் செயற்கை நுண்ணறிவு செயலிகளை உருவாக்கத் தொடங்கிவிட்டோம். 

போலி கணக்குகளை எங்களால் முடக்கவும் முடியும், தடுக்கவும் முடியும். கடந்த ஆண்டு அலபாமாவில் சிறப்பு தேர்தல் நடைபெற்றது. அப்போது போலி கணக்குகள் மற்றும் போலி செய்திகளை அடையாளம் காண நாங்கள் புதிய செயலிகளை பயன்பாட்டிற்கு கொண்டு வந்தோம். அப்போது போலியான செய்திகளைப் பரப்ப முயற்சி செய்த மாக்கடோனியக் கணக்குகளை நாங்கள் கண்டுபிடித்தோம், அவைகளை எங்களால் நீக்கவும் முடிந்தது என்றார். 

உலக அரங்கில் முகநூல் மிகப்பெரிய சர்ச்சையில் சிக்கிய நிலையில் முதல் முறையாக வெளிப்படையாக மார்க் ஜூக்கர்பெர்க் தன்னுடைய கருத்தை பதிவு செய்து உள்ளார். 

தேர்தல்களில் போலி கணக்குகளை கொண்டு செல்வாக்கை முன்நிறுத்த முயற்சி செய்யப்படுவதை தடுக்க பாதுகாப்பு அம்சங்களை மேம்படுத்தும் பணியை முகநூல் தொடங்கி செயல்படுத்தி வருகிறது எனவும் குறிப்பிட்டார் மார்க் ஜூக்கர்பெர்க்.

-தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்தொடர்நாள் எண்: 18,69,734.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.