Show all

எலான் மஸ்க் புகழாரம்! இந்தியர்களின் தகவல் தொழில் நுட்பப் திறன் குறித்து: கூகுள்முதல் கீச்சுவரை இந்தியர் ஆதிக்கம்

எண்ணிமத் தொழில் நுட்பத் துறையில் இந்தியர்களின் பங்கு அளப்ரியது. திறன்மிக்க வெளி நாட்டினரை தக்க வைத்துக் கொள்கிற அமெரிக்கா, இந்திய திறமைகளால் பெரிதும் பயனடைகிறது என்று எலான் மஸ்க் இந்தியர்களுக்கு புகழாரம் சூட்டியுள்ளார்.

14,கார்த்திகை,தமிழ்த்தொடராண்டு-5123: ஒட்டுமொத்த உலகின் பார்வையும் இந்தியாவின் பக்கம் திரும்ப வைத்துள்ளது கீச்சுவின் அறிவிப்பு. பேரறிமுகமான சமூக வலைதளமாக உலக நாடுகளில் கீச்சு இருந்து வருகின்றது. இனி கீச்சுவை நிர்வகிக்கபோவது ஒரு இந்தியர் என்பது தான், உலக நாடுகளின் இந்தியா மீதான கவன ஈர்ப்புக்கான காரணம்.

உலகின் முன்னணி எண்ணிம நிறுவனங்களில் இந்தியர்களின் பங்கு மிகப்பெரியது. குறிப்பாக இன்று எண்ணிமத் துறையில் புலிகளாக இருக்கும் கூகுள், மைக்ரோசாப்ட், ஐபிஎம், அடோப், விஎம்வேர் உள்ளிட்ட நிறுவனங்களில் இந்தியர்கள் தான் தலைமை நிர்வாக அதிகாரிகளாக உள்ளனர். அந்த பட்டியலில் தற்போது ட்விட்டர் தலைமை செயல் அதிகாரியாக ஒரு இந்தியரே நியமிக்கப்பட்டுள்ளார்.

இப்படி எண்ணிமத் தொழில் நுட்பத் துறையில் இந்தியர்களின் பங்கு அளப்ரியது. திறன்மிக்க வெளி நாட்டினரை தக்க வைத்துக் கொள்கிற அமெரிக்கா, இந்திய திறமைகளால் பெரிதும் பயனடைகிறது என்று எலான் மஸ்க் இந்தியர்களுக்கு புகழாரம் சூட்டியுள்ளார்.

உலகின் தொழில்நுட்ப புலிகளில் இந்தியத் தமிழரில் ஒருவராக கூகுள் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி சுந்தர் பிச்சை திகழ்கின்றார். மதுரையில் பிறந்து வளர்ந்த சுந்தர் படித்தது சென்னையில். இன்று கூகுள், ஆல்பாபெட் நிறுவனங்களை வழி நடத்திக் கொண்டிருக்கிறார். இவர் கடந்த ஆறு ஆண்டுகளுக்கு முன்பு ஆல்பாபெட் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரியாக நியமிக்கப்பட்டார்.

மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் தலைவரான சத்ய நாதௌ;ளா, ஹைத்ராபாத்தில் பிறந்தவர். மணிப்பால் பல்கலைக்கழகத்தில் இளவல் பட்டம் பெற்றவர். இவர் ஏழாண்டுகளுக்கு முன்பு மைக்ரோ சாப்ட் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரியாக இருந்தவர், ஆறு மாதங்களுக்கு முன்பு தலைவராக நியமனம் செய்யப்பட்டார்.


கடந்த ஆண்டு முதல் ஐபிஎம் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரியாக இருந்து வரும் அர்விந்த் கிருஷ்ணா, ஆந்திராவில் பிறந்தவர். கடந்த முப்பது ஆண்டுகளுக்கு முன்பே தனது பணியினை ஐபிஎம்மில் தொடங்கினார் இவர். படிப்படியான முன்னேற்றம் கண்டு இன்று தலைமை செயல் அதிகாரியாக உயர்ந்துள்ளார்.

அடோப் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரியாக இருக்கும் சாந்தணு நாராயண், இவர் ஹைத்ராபாத்தில் பிறந்தவர். உஸ்மானியா பல்கலைகழகத்தில் இளவல் படித்த சாந்தணு, அமெரிக்காவில் முதுவர் படிப்பினை முடித்தார்.

தற்போது கீச்சுவில் தலைவர் பொறுப்பு ஏற்றிருக்கிற பரக் அக்ராவல் இந்தியாவில் ஐஐடி மும்பையில் இளவல் பட்டப்படிப்பு முடித்தவர். அமெரிக்காவின் ஸ்டோன்போர்டு பல்கலைக் கழக்கத்தில் கணினி இயலில் முனைவர் பட்டமும் பெற்றார். பத்து ஆண்டுகளுக்கு முன்பு கீச்சுவில்  தனது பணியினைத் தொடங்கிய பரக், இன்று தனது திறமையால் தலைமை செயல் அதிகாரியாக முன்னேறியுள்ளார்.
-தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்த்தொடர்நாள் எண்: 18,71,083.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.