Show all

7 வினாடிகளில் ரூ.33 கோடி மதிப்புள்ள வைர மோதிரம் கொள்ளை

ஹாங்காங் நகரில் ஷிம் ஷா சூய் என்ற நகைக்கடையில் 7 வினாடிகளில் ரூ.33 கோடி மதிப்புள்ள வைர மோதிரம் கொள்ளையடிக்கப்பட்டுள்ளது. நேற்று காலை முகமூடி அணிந்த மர்மநபர், தனது கையில் வைத்திருந்த சுத்தியலால் நகைக்கடையின் கண்ணாடியை உடைத்து அதிலிருந்த வைர மோதிரத்தை கொள்ளையடித்துள்ளார். ரூ.33 கோடி மதிப்புள்ள வைர மோதிரத்தைத் கொள்ளையடிக்க எடுத்துக் கொண்ட நேரம் வெறும் 7 விநாடிகள் மட்டும் தான்.

     22 காரட் மதிப்புள்ள அந்த வைர மோதிரத்தின் மொத்த மதிப்பு 5 மில்லியன் டாலர்கள் அதாவது, இந்திய மதிப்பில் ரூ.33 கோடி ஆகும். மர்மநபர் வைர மோதிரத்தை கொள்ளையடித்து சென்ற காட்சிகள் கடையில் உள்ள கண்காணிப்பு படக்கருவியில் பதிவாகியுள்ளது. இதனை வைத்து அந்த கொள்ளையனை ஹாங்காங் போலீசார் தற்போது தீவிரமாகத் தேடி வருகின்றனர்.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.