Show all

இந்திய மீனவர்களுக்கு பிணை வழங்க தலைக்கு ஒரு கோடி கேட்கிறது இலங்கை!

தமிழ்நாட்டைச் சேர்ந்த இந்திய மீனவர்கள் பிணையில் செல்ல ஒரு கோடி ரூபாய் செலுத்த வேண்டும் என்பதாக இலங்கை அறங்டகூற்றுமன்றம் உத்தரவிட்டது அதிர்ச்சியாகப் பார்க்கப்படுகிறது.

25,பங்குனி,தமிழ்த்தொடராண்டு-5123: தமிழ்நாட்டின் இராமேசுவரம் பகுதி இந்திய மீனவர்கள் பனிரெண்டு பேர்களை இரண்டு கிழமைகளுக்கு முன்பு எல்லை தாண்டி மீன்பிடித்ததாக, இலங்கை கடற்படை கைது செய்து, இவர்கள் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது.

12 பேர்களும் கிளிநொச்சி அறங்கூற்றுமன்றத்தில் அணியப்படுத்தப்பட்ட நிலையில் ஒரு மாத காலம் அவர்களை யாழ்ப்பாணம் சிறையில் அடைக்க அறங்டகூற்றுமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இந்த வழக்கு தொடர்பான விசாரணை இலங்கை அறங்கூற்றுமன்றத்தில் நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது, மீனவர்களுக்கு பிணை வழங்க கோரப்பட்டது.

அப்போது, இந்திய மீனவர்கள் பிணையில் செல்ல வேண்டுமென்றால் ஆள் ஒருவருக்கு இந்திய ரூபாய் மதிப்பில் ஒரு கோடி செலுத்த வேண்டும் என்று இலங்கை அறங்கூற்றுமன்றம் உத்தரவிட்டுள்ளது.

-தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்த்தொடர்நாள் எண்: 18,71,212.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.