Show all

கோத்தபய ஆதிக்கவாதப் பேட்டி! சிங்கள மக்களின் விருப்பத்திற்கு எதிராக, ஈழத்தமிழர்களுக்கு அதிகாரத்தில் பகிர்வு- இயலவில்லை

ஈழத் தமிழர்களுக்கு அதிகாரப் பகிர்வு செய்வது தமது முன்னுரிமை இல்லை என்று இலங்கை அதிபர் கோத்தபாய ராஜபக்சே தெரிவித்துள்ளதற்கு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

15,கார்த்திகை,தமிழ்தொடர்ஆண்டு-5121: ஈழத் தமிழர்களுக்கு அதிகாரப்பகிர்வு செய்வது எனது முன்னுரிமை இல்லை என்றும், பெரும்பான்மை சிங்கள மக்களின் விருப்பத்திற்கு எதிராக, ஈழத்தமிழர்களுக்கு அதிகாரத்தில் பகிர்வு அளிக்க இயலவில்லை என்றும் இலங்கை அதிபர் கோத்தபய ராஜபக்சே இன்றைய தி ஹிந்து ஆங்கில இதழுக்கு அளித்துள்ள ஆதிக்கவாதப் பேட்டி- 

இலங்கையில் வாழும் மக்கள் அனைவரையும் சமமாகக் கருதுகிறேன் என்று கூறிய இலங்கை அதிபர், இந்திய தலைமை அமைச்சரைச சந்தித்த பிறகு, இப்படி பேட்டி அளித்திருப்பது மிகவும் கவலையளிக்கிறது என்கின்றனர் தமிழர் ஆதரவு நிலைப்பாட்டினர். 

பெரும்பான்மை, சிறுபான்மை என்று பிளவுபடுத்தி பிரித்துப் பேசுவது, அவர் மனதை எது ஆட்கொண்டுள்ளது என்பதற்கான அறிகுறியே தவிர, மக்களாட்சியைப் போற்றுவதாகாது. இந்தியத் தலைமைஅமைச்சர் மோடி உடனடியாகத் தலையிட்டு, இலங்கையில் தமிழர்கள் விரும்பும் அரசியல் தீர்வு கிடைத்து, அவர்கள் கண்ணியத்துடனும் சுயமரியாதையுடனும் வாழ்வதற்குத் தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொள்ள வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன். இவ்வாறு ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

-தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல, தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்த் தொடர்நாள் எண்:18,70,353.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.