Show all

பிரித்தானிய நாடாளுமன்றத்தில் முன்னெடுக்கப்பட்டது! முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வு

பிரித்தானியாவில் வாழ்கின்ற ஈழத்தமிழர்களின் ஏற்பாட்டில் நேற்று முன்னெடுக்கப்பட்ட, முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வில் பல்வேறு கட்சிகளைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர்கள், அமைச்சர்கள் உட்பட ஏராளமானோர் கலந்து கொண்டிருந்தனர்.

05,வைகாசி,தமிழ்த்தொடராண்டு-5124: தமிழீழ இறுதிக்கட்ட போரின் போது முள்ளிவாய்க்காலில் பல்லாயிரக்கணக்கான மக்கள் கொன்றொழிக்கப்பட்ட தமிழின படுகொலையின் 13ம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு உணர்வெளிச்சியுடன் பிரித்தானிய நாடாளுமன்றத்தில் நேற்று இடம் பெற்றது.

பிரித்தானியாவில் வாழ்கின்ற ஈழத்தமிழர்களின் ஏற்பாட்டில் இந்த  நினைவேந்தல் நிகழ்வு முன்னெடுக்கப்பட்டது. இந்த நினைவேந்தல் நிகழ்வில் பல்வேறு கட்சிகளைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர்கள், அமைச்சர்கள் உட்பட ஏராளமானோர் கலந்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
-தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்த்தொடர்நாள் எண்: 18,71,253.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.