Show all

கச்சத்தீவை தாரை வார்த்த பிறகு தான் மீனவர்கள் மீது இலங்கை கடற்படை தாக்குதல்.

சென்னை தி.நகரில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் மதவெறி சக்திகளை எதிர்த்து கண்டன கூட்டம்  நடந்தது.

கூட்டத்திற்கு பிறகு கட்சியின் தேசிய செயலாளர் டி.ராஜா நிருபர்களிடம் கூறியதாவது:

இந்திய மீனவர்கள் மீது இலங்கை கடற்படையினர் தொடர்ந்து தாக்குதல்  நடத்தி வருகின்றனர். 34 மீனவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்திய மீனவர்கள் இலங்கை கடற்படையால் தாக்குதல் உள்ளாக்கும் சம்பவம் இலங்கைக்கு  கச்சத்தீவை தாரை வார்த்த பிறகு தான் நடந்து வருகிறது.

எனவே, கச்சத்தீவு ஒப்பந்தத்தை மறு ஆய்வு செய்ய வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.கூட்டத்தில் மாநில செயலாளர் முத்தரசன், துணை செயலாளர் சுப்பராயன், செயற்குழு உறுப்பினர் பழனிச்சாமி, மாவட்ட செயலாளர்கள் ஏழுமலை, மூர்த்தி உட்பட  பலர் கலந்து கொண்டனர்.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.