Show all

பேரக்குழந்தைகள் பயக்காமல் பார்ப்பார்களா! பேரக்குழந்தைகளுக்கு காட்டவென்று, சிங்கங்களை வளர்த்து வரும் மெக்ஸிகோ மனிதர்

26,புரட்டாசி,தமிழ்தொடர்ஆண்டு-5120: அழிந்து வரும் வெள்ளை நிற சிங்கங்களை தன் பேரக் குழந்தைகள் பார்க்க வேண்டும் என்று தான் விருப்பப்படுவதால் இவற்றை தாம் வைத்திருப்பதாக ஒமர் தெரிவித்து, மெக்ஸிகோவில் தன் வீட்டு மொட்;;டை மாடியில் கடந்த இருபது ஆண்டுகளாக மூன்று சிங்கங்களை வளர்த்து வருகிறார். இந்தச் சிங்கங்களை வளர்ப்பதற்கு முறையான ஆவணங்கள் வைத்திருப்பதாக அவர் தெரிவிக்கிறார்.

ஒமர் வசிக்கும் பகுதி, அதிக மக்கள் தொகை இருக்கும் இடம் என்பதால் சிங்கங்கள் கர்ஜிப்பது, சுற்றி இருப்பவர்களுக்கு கவலையை ஏற்படுத்தி உள்ளது. சிங்கங்கள் முறையாக பார்த்துக் கொள்ளப்பட அவற்றை வீட்டில் இருந்து வெளியேற்ற வேண்டும் என்று அதிகாரிகள் கூறுகின்றனர். ஆனால் ஓமர் அதிகாரிகளுக்கு உடன்பட மறுத்து வருகிறார்.

இன்று இந்தச் செய்தி இணைய ஆர்வலர்களைக் கவரக் கூடிய உலகச் செய்தியாக: இணையத்தில் பார்க்க, விரும்ப, பகிரப் பட்டு வருகிறது.

-தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்தொடர்நாள் எண்: 18,69,938.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.