அமெரிக்கா, இந்தியாவுடன் கூட்டாக இணைந்து செயல்பட்ட லட்சக்கணக்கானவர்களுக்கு அப்துல் கலாம், முன்னுதாராமாக இருந்தார் என்று அமெரிக்க அதிபர் ஒபாமா புகழாரம் சூட்டியுள்ளார்.இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், குடியரசு முன்னாள் தலைவர் அப்துல்கலாமின் மறைவுக்கு அமெரிக்க மக்கள் சார்பில் தனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்து கொள்வதாக கூறியுள்ளார்.
இந்தியா , அமெரிக்கா இடையே நல்லுறவு மேம்பட அப்துல் கலாம் முக்கிய பங்களிப்பை கொடுத்ததாக ஒபாமா தெரிவித்துள்ளார்.கலாமின் மனிதாபமானம், பொது சேவையில் அர்ப்பணிப்பு ஆகியவை , லட்சக்கணக்கான இந்தியர்கள் மற்றும் உலகில் உள்ள பலருக்கும் முன்னுதாரணமாக இருப்பதாகவும் அமெரிக்க அதிபர் ஒபாமா புகழாரம் சூட்டியுள்ளார்.
மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.