2016 ஆம் ஆண்டிற்கான ஆடவர் மற்றும் மகளிருக்கான 20 ஓவர் உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டிகள் மார்ச் 11ஆம் தேதி முதல் ஏப்ரல் 3ஆம் தேதி வரை இந்தியாவில் நடைபெற உள்ளது.இதற்கான போட்டிகள் எந்தெந்த இடங்களில் நடைபெற உள்ளன என்பதை பி.சி.சி.ஐ அறிவித்துள்ளது. பெங்களூரு, சென்னை, தர்மசலா, மொஹாலி, மும்பை, நாக்பூர், டெல்லி, கொல்கத்தா ஆகிய நகரங்களில் நடைபெறும் என்று பி.சி.சி.ஐ அறிவித்துள்ளது.
இது குறித்து அறிக்கை வெளியிட்டுள்ள பி.சி.சி.ஐ செயலாளர் அனுராக் தாக்கூர், 2016 ஆம் ஆண்டிற்கான 20 ஓவர் உலகக்கோப்பை போட்டிகளை நடத்துவதில் பி.சி.சி.ஐ பெருமை கொள்கிறது என்றார். மேலும், அனைத்து மைதானங்களும் சர்வதேச தரத்தில் இருப்பதாக குறிப்பிட்டார்.
மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.