Show all

மதுரையைச் சேர்ந்த நபர் உயிரிழப்பு! கொரோனாவுக்குத் தமிழகத்தில் முதல் இழப்பு

கொரோனா உற்பத்திக்கு காரணமாக அமைந்தது சீனா. தமிழகத்தில் அது பரவுவதற்கு வெளிநாட்டிலிருந்து தமிழகம் வந்தவர்கள் காரணமாக இருக்கிறார்கள். முதல் கொரோனா உயிரிழப்பை சந்தித்துள்ளது தமிழகம்.

12,பங்குனி,தமிழ்தொடர்ஆண்டு-5121: கொரோனா தொற்றால் பாதிப்படைந்த மதுரையைச் சேர்ந்த 54அகவையுள்ள நபர் உயிரிழந்துள்ளார் என்று அமைச்சர் விஜயபாஸ்கர் அறிவித்துள்ளார். கொரோனாவால் தமிழகத்தில் ஏற்பட்ட முதல் இழப்பு இதுதான். அவர் மதுரை இராசாசி மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்தார். இந்நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.