Show all

வைரமுத்துவை துன்புறுத்துகிற செயலுக்கு வழிவிட்ட, உலகத் தமிழர் ஒவ்வொருவரும் வெட்கி தலை குனிய வேண்டும்.

07,தை,தமிழ்தொடர்ஆண்டு-5119: தமிழை ஆண்டாள் என்ற தலைப்பில் பாடலாசிரியர் வைரமுத்து வடித்த, படித்த கட்டுரையைப் படித்துப் பார்த்தால், அவர் ஆண்டாளை எவ்வளவு உயரத்திற்கு உயர்த்திப் பிடித்திருக்கிறார் என்பது தெரிகிறது.

ஆண்டாளை பிறப்பாலும் சாதியாலும் தாழ்த்த அன்றைய ஆரிய வர்னாசிரம தருமம் முனைந்த போது, தமிழையே தன் கேடயமாகக் கொண்டு சாதித்திருக்கிறாள் ஆண்டாள்.

இதையே தமிழைஆண்டாள் என்ற தலைப்பில் பாடலாசிரியர் வைரமுத்து காவியம் வடித்திருக்கிறார். இந்தக் காவியம் காலம் கடந்தும் ஆண்டாளுக்கு எதிரான ஆரிய சூழ்ச்சிகளை பறைசாற்றும்.

ஒரு ஆரியன் ஆண்டாளின் வாழ்க்கைளை ஒற்றை வரியில் கொச்சை படுத்தியது குறித்து மேற்கோள் காட்டி ஆண்டாள் மீதான தன் பரிவை வெளிப் படுத்தியிருக்கிறார்.

இன்னும் கொஞ்ச காலம் கழித்து இந்தப் பாஜக கூட்டம் உலகத் தமிழர் தலைவன் பிரபாகரன் அவர்களைக் கூட கொஞ்சம் கூட வெட்கம் இல்லாமல் ஹிந்து என்று கதைகட்டும்.

தமிழைஆண்டாள் கட்டுரையை முழுமையாகப் படித்து விட்;டு, ஆண்டாள் எழுதிய திருப்பாவையையும், நாச்சியார்கோவையையும் படித்துப் பார்த்தால் பாடலாசிரியர் வைரமுத்துவே ஆண்டாளுக்கான அரண். பாஜகவினர் ஆண்டாளுக்கான முரண் என்பது தெளிவாகப் புரிந்து விடும்.

ஆண்டாள் ஹிந்துத்துவவாதி அல்லள். அன்றைக்கு இருந்த வைஷ்ணவசமய வாத பெண்ணடிமைத்தனத்திற்கு எதிரான போராளி. அவர்கள் தனது போராட்டத்திற்கு தன் தாய்த்தமிழோடு, திருமாலையே கருவியாக்கிக் கொண்டார் என்பதே உண்மை. அதையே பாடலாசிரியர் வைரமுத்து வடித்த இந்தக் கட்டுரை நமக்கு உணர்த்துகிறது.

ஆண்டாளுக்கு பாஜகவினர் உரிமை கொண்டாடுவது பட்டியில் இருந்து தப்பித்து வந்த வெட்டப்படப் போகிற ஆட்டுக்கு பட்டிக்காரன் உரிமை கொண்டாடுகிற கதைதான். அன்றைக்கு ஆண்டாளை சமய ஆணாதிக்கத்திற்கு உட்படுத்திய கூட்டத்தின் வாரிசுகள்;;;;;; தாம் இன்றைய இந்த பாஜக கூட்டம்.

இன்றைக்கும் தமிழர் யாரும் நுழைய முடியாத கோயில் கருவறைக்குள் அன்றே நுழைந்த தமிழ்ப் போராளிதான் ஆண்டாள்.

தமிழர்கள் இந்த எதிரிகளை கவனமாக புரிந்து கொள்வார்கள். இந்தக் கூட்டங்களுக்கு நோட்;டாவிற்கு தரும் மரியாதை கூட தரமாட்டார்கள். வீணாய் போன ஊடகங்கள் தான் இந்தக் கூட்டத்தின் வாய்ச்சவடால்களுக்கும் களம் அமைத்துத் தருகின்றன.

ஆண்டாளை போற்றிக் கொண்ட வைரமுத்துவை, குற்றக் கூண்டில் நிறுத்த முயன்று துன்புறுத்துகிற செயலுக்கு வழிவிட்ட, உலகத் தமிழர் ஒவ்வொருவரும் வெட்கி தலை குனிய வேண்டும்.

-தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்தொடர்நாள் எண்: 18,69,673

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.