15,மார்கழி,தமிழ்தொடர்ஆண்டு-5119: எடப்பாடியார் எச்சரிக்கை! அதிமுகவை அழிக்க வேண்டும் என்று நினைப்பவர்களின் கனவு எப்போதும் நிறைவேறாது. இந்த ஆட்சியையும் கவிழ்க்க முடியாது கட்சியையும் அழிக்க முடியாது, எங்களிடம் இருப்பவர்கள் அனைவரும் பத்தரை மாதத்தில் ஒற்றுமையாக இருந்து இதை நிரூபித்துக் காட்டியுள்ளனர். எதிர்க்கட்சித் தலைவர் ஆட்சியை கவிழ்ப்பேன் என்று சொல்லி ஓய்ந்துவிட்டார். தினகரன் ஒரு விசயத்தை இப்போது சொல்லி வருகிறார். மூன்று மாதத்திற்குள் ஆட்சி இருக்காது என்று. நீ இருந்தால் தானே ஆட்சியை கலைப்ப, நீயே மூன்று மாதத்திற்குள் எங்க இருக்குறன்னு பாத்துக்கலாம் ஆண்டவன் ஒருவன் இருக்கிறான். (யாரு அமித்ஷாவா) ஏனென்றால் அதிமுக என்பது பலரும் உயிர்த் தியாகம் செய்து தொடங்கிய கட்சி. கடந்த 45 ஆண்டுகளாக பலர் சிறை சென்று அதிமுகவை கட்டிக் காத்திருக்கின்றனர். அப்படி கட்டிக்காத்த இயக்கத்தை அழிக்க நினைப்பவர்களை இறைவன் பார்த்துக் கொள்வார். ஜெயலலிதாவின் வழியில் இந்த ஆட்சி சிறப்பாக நடைபெற்று வருகிறது. -தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்தொடர்நாள் எண்: 18,69,652
மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.