Show all

தினகரன் என்ன தேசதுரோக குற்றத்தையா செய்துவிட்டார்? திருநாவுக்கரசர் கேள்வி

டிடிவி தினகரன் தேச விரோத செயலையோ, கடுமையான குற்றங்களையோ செய்துவிடவில்லை என்று தமிழக காங்கிரஸ் கமிட்டியின் தலைவர் எஸ்.திருநாவுக்கரசர் கூறியுள்ளார்

     தமிழக காங்கிரஸ் கமிட்டியின் தலைவர் எஸ்.திருநாவுக்கரசர் இன்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, அதிமுகவில் பலமில்லாத ஒரு அணியை பலப்படுத்துவதற்காக பாஜக, தினகரனின் கைது நடவடிக்கையை கையில் எடுத்துள்ளது.

     தினகரன் தேசவிரோத செயலையோ, கடுமையான குற்றங்களையோ செய்துவிடவில்லை. இவர் மீது மட்டும் நடவடிக்கை எடுத்தால் போதாதது. அந்த பணத்தை வாங்க தேர்தல் ஆணையத்தில் முயற்சி செய்தவர்களும் குற்றவாளிகளே. எனவே அவர்கள் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

     இதனால் திருநாவுக்கரசரைத் தலைவர் பதவியிலிருந்து நீக்குவது குறித்து கட்சித் தலைமையிடம் ஸ்டாலின் பேச்சுவார்த்தை நடத்தியதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

     இந்நிலையில் தான் அதிமுகவில் இருந்திருந்தால் முதல்வர் ஆகியிருப்பேன் என்று தெரிவித்திருந்த திருநாவுக்கரசர், தினகரனுக்கு பாதகமான சூழலை உருவாக்கும் பாஜகவின் அரசியல் சூழ்ச்சியை மிகத்; துணிவுடன் வெளிப்படுத்தியுள்ளார்.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.