Show all

நியாயத்திற்காக 27 ஆண்டுகளாக காத்திருக்கும் ஒருதாயின் கண்ணீர்

04,புரட்டாசி,தமிழ்தொடர்ஆண்டு-5120: முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் சிறையில் உள்ள பேரறிவாளன் உள்ளிட்ட ஏழு பேரை விடுவிப்பது தொடர்பாக தமிழக அரசு முடிவு செய்யலாம் என உச்ச அறங்கூற்றுமன்றம் அண்மையில் உத்தரவிட்டது. 

இந்நிலையில், யார் பூனைக்கு மணி கட்டுவது தெரியாமல், அந்த உத்தரவுக்கான செயல்பாடு அப்படியே நிற்கிறது. இந்நிலையில், சென்னை சேப்பாக்கத்தில் இன்று செய்தியாளர்களைச் சந்தித்த பேரறிவாளன் தாயார் அற்புதம்மாள், இந்த வழக்கால் நானும் பேரறிவாளனும் பாதிக்கப்பட்டிருக்கிறோம். என் மகன் மற்றும் என்னுடைய வாழ்க்கையே போய்விட்டது.

ராஜீவ் காந்தி கொல்லப்பட்டது தாங்க முடியாத துயரம் என்பதை வெளிப்படுத்தியிருக்கிறோம். இந்த வழக்கில் விசாரணை நடத்தி உண்மையான குற்றவாளிகளைக் கண்டறிந்தார்களா? எங்களுக்குப் பொருளாதாரச் செழிப்பு இல்லை. இருந்தாலும், சட்ட ரீதியாகப் போராடுகிறோம்.

உண்மை குற்றவாளி யார் எனத் தெரியவில்லை என்று என் மகனே வழக்கு தொடுத்திருக்கிறான். என் மகன் வாங்கி தந்த 9 வோல்ட் மின்கலம்தான் பெல்ட் குண்டு செய்யப் பயன்பட்டது என்பதை இன்று வரை நிரூபிக்க முடியவில்லை. குண்டு தயாரித்தவர் இலங்கை அரசின் கட்டுப்பாட்டில் உள்ள டிக்சன். அவரை விசாரிக்க அனுமதியே கிடைக்கவில்லை. என அற்புதம்மாள் கண்ணீர் வடித்தார்.

-தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்தொடர்நாள் எண்: 18,69,916.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.