Show all

திருப்பரங்குன்றம் இடைத்தேர்தலின் முடிவு! நாடளுமன்ற தேர்தலுக்கான கூட்டணியைத் தீர்மானிக்கும்

22,ஆடி,தமிழ்தொடர்ஆண்டு-5120: ஆண்டிபட்டியில் செய்தியாளர் களிடம் அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் கொள்கை பரப்பு செயலாளர் தங்க. தமிழ்ச் செல்வன் கூறியதாவது: திருப்பரங்குன்றம் தொகுதியில் 6 மாதங்களுக்குள் இடைத்தேர்தல் நடத்த வேண்டும். இந்த தேர்தலின் மூலம் மக்கள் ஆதரவு யாருக்கு என்பது தெரிந்து விடும். இத்தேர்தல் அடுத்த மக்களவைத் தேர்தல் கூட்டணிக்கான அச்சாரமாக அமையும். திருப்பரங்குன்றம் இடைத் தேர்தலில் எங்களுக்குத்தான் வெற்றி கிடைக்கும்.

இராகிநகர் தொகுதியில் சுயேச்சை வேட்பாளராக போட்டி யிட்டு தினகரன் வெற்றிபெற்றார். ஆனால், அதிமுகவுக்கு சின்னம் இருந்தும் தோல்வியடைந்து விட்டது. அதிமுகவுக்கு மக்கள் மத்தியில் செல்வாக்கு இல்லை. இவ்வாறு அவர் கூறினார்.

-தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்தொடர்நாள் எண்: 18,69,872.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.