தமிழக காவிரி விவசாயிகள்
சங்கத்தின் பொதுச்செயலாளர் பி.ஆர்.பாண்டியன் இன்று விவசாயிகளுடன் தொடர்வண்டி மறியல்
போராட்டத்தில் ஈடுபட்டார். அப்போது பிரதமர் மோடிமீது வழக்குப்பதிவு செய்யுமாறு வலியுறுத்தி
காவல் ஆய்வாளருக்குக் கடிதம் கொடுத்துள்ளார். அந்தக் கடிதத்தில், ‘காவிரி மேலாண்மை வாரியம்
அமைக்க உச்சநீதிமன்றம் உத்தரவிட்டும் பிரதமர் மோடி நடவடிக்கை எடுக்கவில்லை. மோடிமீது
அவமதிப்பு வழக்குப் பதிவு செய்ய வேண்டும். மேலும் விவசாயிகளைத் தற்கொலைக்குத் தூண்டியதாகவும்
வழக்குப் பதிவு செய்ய வேண்டும்’ என்று குறிப்பிடப்பட்டுள்ளது. மோடியின் மீது தமிழ் மக்களுக்கு இருக்கிற கோபத்தை
பிரதிபலிப்பதாக இருக்கிறது இந்தச் செயல்.
மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.