Show all

அறுபது ஆண்டுகளுக்குப் பிறகு தமிழகத்தை நோக்கி மீண்டும் அந்தப் புயல்! தமிழ்நாடு வெதர்மேன்

சித்திரையில் கோடைமழை பெய்தால் அந்த ஆண்டு நல்லமழை இருக்கும் என்பது தமிழர்தம் பலஆயிரம் ஆண்டு கால அனுபவம். இந்த ஆண்டு தமிழகத்திற்கு அந்த வாய்ப்பு கிடைத்திருக்கிறது; மகிழ்ச்சி. ஆனாலும் கொஞ்சம் கூடுதலாகவே மழை இருக்குமோ என்ற அச்சத்;தையும் அவ்வப்போது தெரிவிக்கப் படும் வானிலை அறிக்கைகள் அச்சத்தை தோற்றுவிக்கின்றன.

12,சித்திரை,தமிழ்தொடர்ஆண்டு-5121: வங்கக் கடல் மற்றும் அதனை ஒட்டியுள்ள இந்தியப் பெருங்கடல் பகுதியில் காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகி, சனிக்;கிழமை தொடங்கி புயலாக வலுப்பெறும். அந்தப் புயல் தமிழக கடற்கரை பகுதியை நோக்கி நகரக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது. எனவே மீனவர்கள் நாளை முதல் கடலுக்கு செல்ல வேண்டாம். அடுத்து வரும் 24 மணி நேரத்தில் உள்மாவட்டங்களின் ஓரிரு இடங்களில் இடியுடன் கூடிய மழை பெய்யும். வரும் ஞாயிற்றுக் கிழமை தமிழக கடற்கரை பகுதியை நோக்கி புயல் வீச வாய்ப்பு உள்ளது. 
காற்றழுத்த தாழ்வு மண்டலம் புயலாக மாறி தமிழக கடற்கரை பகுதிகளுக்குள் வரும்போது சென்னை உள்பட பல இடங்களில் மழை இருக்கும். தற்போது வரை தமிழக கடற்கரை பகுதியை கடந்து செல்லலாம் அல்லது கடற்கரை பகுதியை ஒட்டியவாறு செல்லலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
கடற்கரை பகுதியை கடந்து சென்றால், தென் தமிழகத்தின் பகுதியாக நுழைந்து கேரளாவுக்கு செல்லும். கடற்கரை பகுதியை ஒட்டியவாறு கடந்து சென்றால் ஆந்திராவை நோக்கி செல்லும். கடற்கரை பகுதியை ஒட்டி செல்லும்போது அதன் இடைவெளி 200 கிலோ மீட்டர் முதல் 300 கிலோ மீட்டர் என்று இருந்தால் மழை இருக்காது என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இந்த நிலையில், தமிழ்நாடு வெதர்மேன் தனது முகநூல் பக்கத்தில் குறிப்பிடுகையில், 'பொதுவாக சித்திரை மாதத்தில் உருவாகும் புயல் பர்மாவையே தாக்கியிருக்கிறது. இதற்கு முன்னதாக அறுபது ஆண்டுகளுக்கு முன்பு உருவான புயல் மட்டுமே தமிழகத்தை தாக்கியிருக்கிறது. அதன்பிறகு, 60 ஆண்டுகள் கழித்து இப்போது மீண்டும் சித்திரையில் உருவாகும் புயல் தமிழகத்தை நோக்கி வர வாய்ப்பிருக்கிறது.
ஆனால், தமிழகத்தில் கடலூர் வழியாக கடந்தால் கடலூர், வேலூர் ஆகிய பகுதிகளில் மிக கன மழை இருக்கும். அதுவே சென்னையில் கடந்தால் சென்னை, காஞ்சிபுரம் ஆகிய மாவட்டங்களில் கன மழை இருக்கும்.
இன்னும் 2 நாட்கள் இருப்பதால், இப்போதே எந்தெந்த மாவட்டங்களுக்கு பாதிப்பு ஏற்படும் என்பதை கணிக்க முடியாது. இப்போதைக்கு 60விழுக்காடு மட்டுமே நம்மால் கூற முடியும். இரண்டு நாட்கள் கழித்து தெளிவாக சொல்ல முடியும். ஆகையால், மக்கள் இப்போதே பதட்டப்பட வேண்டாம்' என்றார்.

-தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்த் தொடர்நாள் எண்:18,70,133.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.