Show all

பிரபாகரனின் மரணத்திற்கு சீமான் உள்ளிட்டவர்களே காரணம்: பாஜக ஸ்ரீநிவாசன் கண்டுபிடிப்பு

தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனின் மரணத்திற்கு தமிழக அரசியல் தலைவர்களான சீமான், வைகோ, திருமாவளவன் உள்ளிட்டவர்களே காரணம் என பா.ஜ.கவின் மாநில செயலாளர் ஸ்ரீநிவாசன் கண்டுபிடித்துள்ளார்.

     பாஜக அரசின் மூன்று ஆண்டுகால சாதனை விளக்க கூட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றிய போது இந்தக் கண்டுபிடிப்;பை வெளிப்படுத்தியுள்ளார். தொடர்ந்தும் கருத்து தெரிவித்த அவர்,

     ஆயுதம் ஏந்திய விடுதலைப் புலிகளின் தலைவரை அந்த ஆயுதத்தை கீழே போட விடாது சீமான், வைகோ, திருமாவளவன் உள்ளிட்டவர்கள் உணர்ச்சிவசப்பட வைத்து மரணிக்க செய்துள்ளார்கள்.

     நன்றாக இருந்த விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனை இறுதி வரை சமாதானம் பேசவிடாது அவர் மரணிப்பதற்கு தமிழக அரசியல் தலைவர்கள் காரணமாக இருந்துள்ளனர்.

     இந்தக் கண்டு பிடிப்பை யாரும் திருடிவிடாமல் இருக்க அவர் இந்தக்; கண்டு பிடிப்பின் பேட்டனை பதிவுசெய்து கொள்வது நல்லது.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.