Show all

லஞ்சம் வாங்கும் அதிகாரிகளின் பட்டியலைத்தர தயார். சிறையில் அடைக்க அரசு தயாரா: விக்கிரமராஜா

05,மார்கழி,தமிழ்தொடர்ஆண்டு-5119: தமிழக அரசை கண்டித்து வணிகர்களை ஒன்று திரட்டி போராட்டம் நடத்த போவதாக தமிழ்நாடு வணிகர் சங்க பேரமைப்பு தலைவர் விக்கிரமராஜா கூறியுள்ளார்.

திண்டுக்கல்லில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், கடைகள் மீது நடவடிக்கை எடுக்காமல் இருக்க உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் லஞ்சம் கேட்டு மிரட்டுவதாக புகார் கூறியுள்ளார். மிரட்டும் அதிகாரிகள் மீது தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும், இல்லையெனில் வணிகர்களை ஒன்று திரட்டி போராட்டம் நடத்தப்படும் என அவர் எச்சரித்துள்ளார்.

லஞ்சம் வாங்கும் அல்லது கேட்கும் அதிகாரிகளின் பட்டியலை தர நாங்கள் தயாராக இருக்கிறோம். அந்த அதிகாரிகளைச் சிறையில் அடைக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். ஆனால் வியாபாரிகளுக்கு அபராதம், சிறை, கடை சீல் வைப்பு என தங்கள் மீது நடவடிக்கை பாயுமேயானால் மாநிலம் தழுவிய போராட்டம் நடத்தப்படும் என்றார்.

-தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்தொடர்நாள் எண்: 18,69,642

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.