Show all

மக்கள் புலம்புகிறார்கள்! அதென்ன எச்.இராஜவுக்கு மட்டும் தனியாக ஒரு நியாயம்

07,ஐப்பசி,தமிழ்தொடர்ஆண்டு-5120: அறங்கூற்று மன்றத்தை அவமதித்ததாகி விடுமோ என்று அஞ்சி, எளிய மக்கள் அறங்கூற்று மன்றத்தின் பாதகமான தீர்ப்பைக் கூட சிவனேயென்று ஏற்றுக் கொண்டு விடுவார்கள். தற்போது எச்.இராஜா அவர்கள் அறங்கூற்று மன்றத்தைக் கண்டபடி திட்டி விட்டு, அறங்கூற்று மன்றத்தில் அணியமாகி, நிபந்தனையற்ற மன்னிப்பு கேட்டு, அறங்கூற்று மன்றத்தால் மன்னிக்கவும் பட்டிருக்கிறார். 

இந்தியா விடுதலை பெற்றதிலிருந்து எத்தனை கசமுசா தீர்ப்புகளை பற்றியெல்லாம் கருத்துக் கூற முயலாமல், அறங்கூற்று மன்ற அவமதிப்பு ஆகி விடுமோ என்று அஞ்சி அஞ்சி செத்திருப்போம். அதென்ன அறங்கூற்று மன்றத்தை கண்டபடி பேசிவிட்டு மன்னிப்பு கேட்பது. அதை அறங்கூற்று மன்றமும் மன்னிப்பது: மக்கள் புலம்புகிறார்கள்.

-தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்தொடர்நாள் எண்: 18,69,950.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.