Show all

பயணிகள் பீதி! ஓடிக்கொண்டிருந்தபோதே மின்சாரத் தொடர்வண்டிப் பெட்டிகள் இணைப்பறுந்து பிரிந்தன

07,பங்குனி,தமிழ்தொடர்ஆண்டு-5119: சென்னை அருகே மின்சார தொடர்வண்டியில் வரிசையாகத் தொடரும் பெட்டிகளில் இரண்டு பெட்டிகளுக்கு இடையிலான இணைப்புப் பகுதி உடைந்து போனதால் அந்த உடைப்புக்கு பிந்தைய பெட்டிகள் தனிப்பகுதியாக  பிரிந்துவிட்டதால் செங்கல்பட்டு-சென்னை கடற்கரை மார்க்கத்தில் தொடர்வண்டிச்  சேவை பாதிக்கப்பட்டது. சென்னை அருகே ஊரப்பாக்கத்தில் இந்த சம்பவம் நடைபெற்றுள்ளது. உடனடியாக தொடர்வண்டி அங்கேயே நிறுத்தப்பட்டது. இதன்பிறகு, தொடர்வண்டிப் பெட்டிகளை இணைக்கும் பணி நடைபெற்றது. இதனால், செங்கல்பட்டு-சென்னை கடற்கரை மார்க்கத்தில் ஒரு மணி நேரத்திற்கும் அதிகமாக தொடர்வண்டிச் சேவை பாதிக்கப்பட்டது. 

இந்த சம்பவம் குறித்து தொடர்வண்டித் துறையினர் விசாரணை நடத்தி வருகிறார்கள். ஓடிக்கொண்டிருந்தபோதே ரயில் பெட்டிகள் பிரிந்த சம்பவம் பயணிகளிடையே பீதியை ஏற்படுத்தியுள்ளது.

-தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்தொடர்நாள் எண்: 18,69,733.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.