Show all

கட்சி தொடங்குவதற்கான முன்னோட்டமாக புதிய செயலி செவ்வாய் அன்று அறிமுகம்: கமல்

19,ஐப்பசி,தமிழ்தொடர்ஆண்டு-5119: சென்னை கேளம்பாக்கத்தில் கமல்ஹாசன் பிறந்தநாள் விழா மற்றும் நற்பணி இயக்கத்தின் 39-வது ஆண்டுவிழா நடைபெற்று வருகிறது.

இந்நிகழ்வில் பேசிய கமல்ஹாசன் நான் கட்சி தொடங்கி அரசியலுக்கு வருவது உறுதி. கட்சி தொடங்குவதற்கு பணம் தேவைப்படும் என்கிறார்கள். அதற்கான பணத்தை என் ரசிகர்களே தருவார்கள்.

ரசிகர்களிடம் 37 ஆண்டுகளாக கையேந்தி வருகிறேன். தமிழ்நாட்டுக்காக கையேந்துவதில் எனக்கு வெட்கம் இல்லை. பணக்காரர்கள் வரியை செலுத்தினாலே நாடு ஓரளவு சீராகி விடும். ஏதோ ஆர்வக்கோளாறில் நான் பேசுவதாக சொல்கிறார்கள். பதவிக்காக நான் இதையெல்லாம் செய்வதாக நினைக்க வேண்டாம்.

வரலாற்றைத் திரும்பிப் பார்க்காமல் செய்த தவறை திரும்பச் செய்கிறோம். மழை வௌ;ளம் போன்ற இயற்கை சீற்றங்கள் எல்லோருக்கும் சமமானது. இதில் ஏழை பணக்காரன் என்ற வேறுபாடு இல்லை. இயற்கை சீற்றங்கள் வருமுன் தவிர்க்க வேண்டும் என்றார்.

அரசியல் கட்சி அறிமுகத்தை அமைதியாக தான் செய்ய முடியும். அரசியல் கட்சி தொடங்குவதற்கான முன்னோட்டமாக புதிய செயலி செவ்வாய் அன்று அறிமுகம் செய்யப்படும். அன்று செயலியின் பெயரும் செயல்முறை விளக்கமும் வெளியிடப்படும் என்று கமல்ஹாசன் ரசிகர்கள் மத்தியில் பேசினார்.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.