Show all

புதிய புதிய நெருக்கடிகளால் நெருக்கும் நீட்! நீட் எழுத அகவையெல்லை; அப்புறப் படுத்தும் முயற்சியில் தமிழகம்

28,சித்திரை,தமிழ்தொடர்ஆண்டு-5119: 25 அகவைக்கு மேற்பட்டவர்கள் நீட் தேர்வு எழுத அனுமதியில்லை என டெல்லி உயர்அறங்கூற்றுமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. 

ஒட்டு மொத்த இந்தியாவில், மிக அதிகமான மருத்துவக் கல்லூரிகளும், மருத்துவ மனைகளும் உள்ள தமிழக மருத்துவக் கல்வி, மருத்துவத் துறையை ஆக்கிரமிக்கும் ஒரே நோக்கோடு மருத்துவ கல்லூரிகளில்  சேர்க்கைக்காக, மோடிஅரசு, நடுவண்;அரசு கட்டுப் பாட்டில் உள்ள நடுவண் இடைநிலைக் கல்வி வாரியத்தின் மூலம் தமிழகத்திற்குமாக பொதுவான நீட் தேர்வு நடத்தவும், அதை அறங்கூற்றுமன்றம் மூலமாக முறைப்படுத்தவும் முடிவு செய்தது. 

தமிழகத்தில் பல்பிடுங்கப் பட்ட பாம்பாக அதிகாரமில்லாத அரசாட்சியில் ஒட்டிக் கொண்டிருக்கும் எடப்பாடி- பன்னீர் அரசு கடந்த இரண்;டு ஆண்டுகளாக தமிழக மாணவர்களின் மருத்துவக் கல்வி வாய்ப்பை, நடுவண் அரசு பறித்;துக் கொள்ள, கோட்டை விட்டு வருகிறது. 

அப்படிப் பட்ட அந்த நீட்தேர்வு தகுதியில்லாத நடுவண் இடைநிலைக் கல்வி வாரயத்தால், அடவடிதனமாக நடத்தப்பட்டு. அசிங்க பட்டு, வாதங்களையும் வழக்குகளையும் சந்தித்து வருகிறது. 

இந்த அவல நிலையிலும், நீட் தேர்வு எழுத 17 அகவை கட்டாயம் நிறைவடைந்திருக்க வேண்டும் என்று, நீட் தேர்வு எழுத இந்திய மருத்துவ கவுன்சில் அகவை வரம்பை அறிவித்தது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து கேரள மாநிலத்தை சேர்ந்த இரண்டு பேர் டெல்லி உயர்அறங்கூற்றுமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். இந்த வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது பொதுப்பிரிவில் 25 அகவைக்கு மேற்பட்டவர்கள் நீட் தேர்வு எழுத முடியாது என டெல்லி அறங்கூற்றுமன்றம் தெரிவித்தது. இதேபோல் இடஒதுக்கீட்டு பிரிவில் 30 அகவைக்கு மேற்பட்டவர்கள் நீட் தேர்வு எழுத முடியாது என்றும் டெல்லி அறங்கூற்றுமன்றம் உத்தரவிட்டுள்ளது. இந்திய மருத்துவ கவுன்சிலின் அறிவிப்பை உறுதி செய்து டெல்லி உயர்அறங்கூற்றுமன்றம் உத்தரவிட்டுள்ளது. 

விரைவில் நீட் தேர்வை அப்புறப் படுத்;தும் முயற்சியில் வெல்லும் கட்சிதான் தமிகத்தை ஆளத் தகுதியுடைய கட்சியாகத் தமிழர்கள் முன்னெடுக்க வேண்டும் என்ற உறுதியில் இருக்கிறார்கள். தமிழக கட்சிகளுக்கு இது தேர்வுகாலம்; ஒழுங்காக தேர்வில் விடையளியுங்கள் இல்லாவிட்டால் ஏமாந்து போவீர்கள். குறிப்பாக ஸ்டாலின்! அதிமுகவிற்கு அடுத்தது நாம்தான் என்ற மிதப்பு வேண்டாம் கழக உடன்பிறப்பே!

-தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்தொடர்நாள் எண்: 18,69,784. 

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.