Show all

மோடியின் காவிரி விவகார மோசடிக் கொதிராக, தமிழர் வாழ்வுரிமைக் கட்சி, சுங்கச்சாவடி முடக்கப் போராட்டம்

18,பங்குனி,தமிழ்தொடர்ஆண்டு-5119: காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காத மோடி அரசைக் கண்டித்தும், சுங்கச்சாவடிகளை அகற்றக் கோரியும் தமிழக வாழ்வுரிமைக் கட்சி உளுந்தூர்பேட்டை சுங்கச்சாவடியில் இன்று காலை போராட்டம் நடத்தியது.

இதையடுத்து போராட்டத்தில் ஈடுபட்ட கட்சியினர் உட்பட தமிழக வாழ்வுரிமை கட்சித் தலைவர் வேல்முருகன் ஆகியோர் கைது செய்யப்பட்டனர். 

மோடியின் காவிரி விவகார மோசடிக் கொதிராக உரிமைக்காக போராடிய வாழ்வுரிமை கட்சியினர் மீது மோடி அரசுக்கு எடுபிடியாக இயங்கி வரும் எடப்பாடி- பன்னீர் அரசு என்னென்ன வழக்குகள் பதிவு செய்யும் என்பது இன்னும் தெரிவிக்கப் படவில்லை. ஆனாலும் சில விளம்பரப் பிச்சை ஊடகங்கள் அவைகளாக வன்முறையில் ஈடுபட்டதாக சோடித்துக் கொண்டன.

-தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்தொடர்நாள் எண்: 18,69,744.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.