Show all

காஞ்சி சங்கராச்சாரியார் மூச்சுத்திணறல் காரணமாக இன்று காலை மருத்துவமனையில் உயிரிழந்தார்

16,மாசி,தமிழ்தொடர்ஆண்டு-5119: காஞ்சி சங்கராச்சாரியார் மூச்சுத்திணறல் காரணமாக இன்று காலை மருத்துவமனையில் உயிரிழந்தார்.

இவருக்கு பல ஆண்டுகளாகவே உயர் ரத்த அழுத்தம் இருந்துவந்தது. ரத்தத்தில் சர்க்கரை அளவும் அடிக்கடி குறைந்துவிடும். இதனால் அடிக்கடி மயக்கம் ஏற்பட்டு வந்தது. சங்கரராமன் கொலை வழக்குக்குப் பின்னர், மனதளவிலும் உடலளவிலும் அவர் சோர்வாகவே காணப்பட்டார்.

இந்த நிலையில், இன்று காலை 8 மணிக்கு அவருக்கு மூச்சுத்திணறல் ஏற்பட்டது. உடனே அவரை அருகில் உள்ள ஏ.பி.சி.டி மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர். சிகிச்சை பலனிற்றி இறந்துவிட்டார். 

-தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்தொடர்நாள் எண்: 18,69,712 

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.