Show all

காவல்துறையின் அடாவடிக்கு இறையாக்கப்பட்ட உசாவின் குடும்பத்திற்கு, ரூ.10லட்சம் கமல் நிதியுதவி அறிவிப்பு

24,மாசி,தமிழ்தொடர்ஆண்டு-5119: சென்னை ராயப்பேட்டையில் மக்கள் நீதி மய்யம் சார்பில்  இன்று அகில உலக மகளிர் நாளையொட்டி ஏற்பாடு செய்யப்பட்டிருந்த விழாவில், நடிகரும், மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவருமான கமல்ஹாசன் கலந்து கொண்டு மக்கள் நடுவே உரையாற்றினார். அப்போது அவர் பேசியதாவது,

தாய் சொல்லை தட்டாதவன் நான், அதனால்தான் இந்த மேடையில் நிற்கிறேன். மய்யத்தில் இருந்து பார்த்தால்தான் நீதியும், நியாயமும் புரியும். பெண்களை மதிக்கச் சொல்லிக் கொடுத்தவர் என் தாய். வீரத்தின் உச்சக்கட்டம் அகிம்சை, அதைச் சொல்லாமல் சொன்னவர் என் தாய். எனக்கு புடவை கட்டத்தெரியும், நான் அதை மீசையை முறுக்கிச் சொல்வேன். உனக்கு பெண்களைப் பற்றி என்ன தெரியும் எனக் கேட்கிறார்கள். எனக்கு புரிந்து கொள்ளத் தெரியும். திருச்சியில் உசா மரணத்தில் அநீதி நிகழ்ந்துள்ளது, நீதியைக் காக்க வேண்டியவர்கள் அநீதியை செய்துள்ளனர். சிறப்பாக செயல்படும் காவலர்களைப் பாராட்டாமல், தவறாக செயல்படும் காவலர்களைத் தண்டிக்க முடியாது. அரசியல் வேண்டாம் என்று ஒதுங்கிய, விசயம் தெரிந்தவர்கள், மய்யத்திற்கு வாருங்கள். தமிழகத்தின் நலன் அதன் வளம் என்பதே எங்களின் முதல் கொள்கை. கட்சியின் திட்டங்கள் மாறினாலும், கொள்கைகள் மாறாது.  எதையும் ஆராயாமல் கருத்து சொல்வது என வேலையல்ல.

இவ்வாறு கமல்ஹாசன் பேசினார்.

திருச்சியில் காவல்துறையினரின்  வாகன சோதனை என்ற பெயரில் நிகழ்த்திய அடாவடியில் உயிரிழந்த உசாவின் குடும்பத்தினருக்கு மக்கள் நீதி மய்யம் சார்பில் ரூ.10 லட்சம் நிதியுதவி அளிக்கப்படும் என கமல்ஹாசன் அறிவித்தார்.

வாழ்த்துக்கள் கமல்! 

-தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்தொடர்நாள் எண்: 18,69,720.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.