Show all

காமென்வெல்த் பளு தூக்கும் போட்டியில் தமிழக மாணவி நிவேதா 8 தங்கம் வென்றார்

சேலம் புதூரைச் சேர்ந்தவர் வெங்கடேஸ்வரன். இவரது மகள் நிவேதா. அவர் மாவட்ட அளவிலும் மாநில அளவிலும் தேசிய அளவிலும் பளு தூக்கும் போட்டியில் பங்குகொண்டு பல பதக்கங்களைப் பெற்றுள்ளார்.

இந்நிலையில் தென் ஆப்பிரிக்காவில் நடந்த காமென்வெல்த் துணைஇளவல் பளு தூக்கும் போட்டியில் பங்கு பெற்ற நிவேதா போட்டியில் 8 தங்கப் பதக்கங்களை வென்றார்.

அதனையடுத்து சேலம் திரும்பிய அவருக்கு சாரட் வண்டியில் அமர வைத்து ஊர்வலமாகச் சென்று உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.

அவர் படிக்கும் பள்ளியில் சக மாணவர்களும் ஆசிரியர்களும் நிவேதாவுக்கு வாழ்த்துத் தெரிவித்து வெற்றியைக் கொண்டாடினர். நிவேதா மூன்றாம் வகுப்புப் படிக்கும் போதிலிருந்து பயிற்சி செய்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.