Show all

பதைபதைக்கிறது நெஞ்சம், பிஞ்சு சிறுமிக்கு நேர்ந்த சோகம்

28,புரட்டாசி,தமிழ்தொடர்ஆண்டு-5120: பொள்ளாச்சி அடுத்த தாளக்கரை அருகே உள்ள நல்லிகவுண்டன் பாளையத்தை சேர்ந்தவர் ரவீந்திரன். கட்டிட தொழிலாளி. இவரது மகள் ஒன்பது அகவை சிரிசாதனா. இந்தச் சிறுமி அங்குள்ள அரசு பள்ளியில் நான்காம் வகுப்பு படித்து வந்தாள். நேற்று ரவீந்திரன், அவரது மனைவி இருவரும் வேலைக்கு சென்று விட்டனர். பாட்டி லோகநாயகி வீட்டில் இருந்தார். சிறுமி சாதனா தனது தம்பியுடன் வீட்டில் சேலையில் தொட்டில் கட்டி சுற்றி விளையாடிக் கொண்டிருந்தார். எதிர்பாராதவிதமாக சாதனா கழுத்தில் தொட்டில் இறுக்கியது. அதிலிருந்து மீளமுடியாமல் தவித்த சாதனா சம்பவ இடத்தில் பலியானாள். பொற்றோரும், உற்றார் உறவினரும், அக்கம் பக்கத்தினரும் சிறுமிக்கு நேர்ந்த சோகத்தால், புலம்பித் தவிக்கிறார்கள். 

-தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்தொடர்நாள் எண்: 18,69,940.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.