Show all

கழிமுகப் பகுதியில் வெறுப்பு! வேளாண் துறை அமைச்சர் பதவி கே.பி.அன்பழகனுக்கு வழங்கியதில்

தமிழக உயர் கல்வித்துறை அமைச்சர் கே.பி. அன்பழகனுக்கு வேளாண்துறை ஒதுக்கப்பட்டதில் கழிமுக மாவட்டத்தில் வெறுப்பு நிலவுவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

17,ஐப்பசி,தமிழ்த்தொடராண்டு-5122: தமிழக வேளாண்துறை அமைச்சர் துரைக்கண்ணு கொரோனா பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில் காலமானார். அவரது உடல் சொந்த ஊரான பாபநாசம் அருகே வன்னியடியில் நல்லடக்கம் செய்யப்பட்டது. 

அமைச்சர் துரைக்கண்ணு வசம் இருந்த வேளாண்துறை யாருக்கு ஒதுக்கப்படும் என்பது தீவிரமான விவாதமாக இருந்தது. கழிமுகப் பகுதியை சேர்ந்தவர் துரைக்கண்ணு என்பதால் பட்டுக்கோட்டை, பேராவூரணி சட்டமன்ற உறுப்பினர்கள் இருவரில் ஒருவருக்கு இந்த பதவி வழங்கப்படலாம் என எதிர்பார்க்கப்பட்டது. அதேபோல் ஜாதிய அடிப்படையில் தமக்கே இந்தத் துறையைக் கூடுதலாக ஒதுக்க வேண்டும் என்று சட்ட அமைச்சர் சி.வி.சண்முகம் வலியுறுத்தி வருவதாக கூறப்பட்டது. 

இந்த நிலையில் உயர்கல்வித்துறை அமைச்சர் கே.பி.அன்பழகனுக்கு கூடுதலாக வேளாண்துறை இலாகா ஒதுக்கப்பட்டிருக்கிறது. இது கழிமுக அதிமுகவில் கடும் வெறுப்பை ஏற்படுத்தி உள்ளதாம். அதிமுகவின் கோட்டையாக கருதப்படும் கழிமுகத்தில் தேர்தல் நேரத்தில் இத்தகைய வெறுப்புக்கு இடம் தந்திருக்க தேவை இல்லை என்பது அதிமுக மூத்;தோர்கள் கருத்தாம்.

இருப்பினும் தேர்தல் நேரத்து இந்த சலசலப்புகளை சமாளித்துவிடலாம் என்கிற நம்பிக்கையில் அதிமுக மேலிடம் இருக்கிறதாம். இதற்காக கழிமுக மற்றும் வடமாவட்ட மூத்த பொறுப்பாளர்கள் மூலம் சமாதான முயற்சிகள் இன்னொரு பக்கம் படுதீவிரமாக மேற்கொள்ளப்பட்டும் வருகிறதாம்.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.