Show all

உதகை அரசு தாவரவியல் பூங்காவில் 120-வது மலர் கண்காட்சி

 

     உதகையில் 27-ந் தேதி தொடங்கும் மலர் கண்காட்சியை முன்னிட்டு மலர் தொட்டிகள் அடுக்கி வைக்கும் பணி மும்முரமாக நடைபெற்று வருகிறது.

மலைகளின் அரசி என்று வர்ணிக்கப்படும் நீலகிரி மாவட்டம் சர்வதேச அளவில் சிறந்த கோடைச்சுற்றுலா தளமாக திகழ்ந்து வருகிறது. 

தமிழர்களுக்கு சித்திரை வைகாசி இளவேனிற் காலம் ஆனி ஆடி முதுவேனிற்காலம்.

உதகையில் ஆண்டு தோறும் இந்த மாதங்கள் கோடைச்சுற்றுலா பருவகாலம் ஆகும்.

இந்தக் காலத்தில் தினமும் ஆயிரக்கணக்கான சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர். உதகை அரசு தாவரவியல் பூங்காவில் 120-வது மலர் கண்காட்சி வருகிற வைகாசி14 தொடங்கி வைகாசி16  (மே27-29 வௌ;ளிக்கிழமை-ஞாயிறு) வரை நடைபெறுகிறது.

 

இந்த மலர் கண்காட்சிக்காக சுமார் 3 லட்சம் மலர்ச் செடிகள் பூங்காவில் நடவு செய்யப்பட்டு உள்ளன. அவைகள் தற்போது பூத்து குலுங்குவதால் பூங்கா வண்ணமயமாக காட்சி அளிக்கிறது. இதனால், சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சி அடைந்து உள்ளனர்.

இந்த நிலையில் தாவரவியல் பூங்காவில் உள்ள அலங்கார மலர் தொட்டிகள் பூங்காவில் அடுக்கி வைக்கும் பணி நேற்று தொடங்கியது. இதனை மாவட்ட ஆட்சியர் சங்கர் தொடங்கி வைத்தார். பின்னர் இதுகுறித்து அவர் கூறியதாவது:

 

உதகை தாவரவியல் பூங்காவில் ஒரியண்டல் லில்லி, ஏசியாடிக்லில்லி, கேலஞ்சியோ, இன்கா மேரிகோல்டு, பிரெஞ்சு மேரி கோல்டு, ஆஸ்டர், சால்வியா, பிகோனியா, பெட்டுனியா, பேன்சி, டேலியா உள்ளிட்ட 194 ரகங்களை சேர்ந்த சுமார் 3 லட்சம் மலர் நாற்றுகள் கடந்த சில மாதங்களுக்கு முன்பு நடவு செய்யப்பட்டன. மேலும், சுற்றுலா பயணிகளைக் கவர்வதற்காக 15 ஆயிரம் தொட்டிகளில் பல வண்ணங்களில் பூக்க கூடிய மலர் செடிகளும் நடவு செய்யப்பட்டு உள்ளன. இந்த மலர் தொட்டிகள் மலர் மாடத்தில் அடுக்கி வைக்கும் பணி இன்று (திங்கள்) தொடங்கி உள்ளது.

இந்தப் பணிகள் இன்னும் ஓரிரு நாட்களில் முடிவுறும். அதன் பிறகு சுற்றுலா பயணிகளின் பார்வைக்கு வைக்கப்படும். மேலும், இந்த ஆண்டு மலர் கண்காட்சிக்கு வருகை தரும் சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சி அடையும் வகையில் அரசு தாவரவியல் பூங்காவில் உள்ள புது பூங்காவில் மலர் தொட்டிகள் அடுக்கி வைக்கப்படும்.  இவ்வாறு அவர் கூறினார்.

 

 

 

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.