Show all

கமல் வழங்கிய, முதல்தரமான மூன்றாந்தரமான பதில்கள்! தன்மானத்திற்கும், இனமானத்திற்கும்

15,மாசி,தமிழ்தொடர்ஆண்டு-5119: நடிகர் கமல்ஹாசனுடன் எனக்கு எந்த தொடர்பும் இல்லை. எனக்கு அவர் சம்பள பாக்கி வைத்து இருக்கிறார் என்று கடந்த சில நாட்களுக்கு முன் நடிகை கவுதமி கூறினார்.

இது பற்றி அவர் தனது கீச்சுப் பக்கத்தில் வெளியிட்டிருந்த செய்தியில், கமலுடன் இணைந்து செயல்பட்டபோது அவருடைய ராஜ்கமல் பட நிறுவனத்துக்காக ஆடை வடிவமைப்பாளராக பணியாற்றினேன். வேறு பட அதிபர்கள் தயாரிப்பில் கமல்ஹாசன் நடித்த படங்களுக்கு ஆடை வடிவமைப்பாளராக இருந்தேன். அதன்மூலம் எனக்கு வருமானம் வந்தது.

 

கமல்ஹாசன் நடித்துள்ள தசாவதாரம், விஸ்வரூபம் படங்களிலும் பணியாற்றினேன். ஆனால் அந்தப் படங்களுக்கு எனக்கு தர வேண்டிய சம்பள பாக்கியை இன்னும் தரவில்லை. அந்தப் பணம் எனது வாழ்க்கைக்கு தேவையானதாக இருக்கிறது. சம்பள பாக்கியை வசூலிக்க பல முறை முயன்றும் கிடைக்கவில்லை என தெரிவித்து இருந்தார்.

இது குறித்து பேட்டி அளித்த கமல்ஹாசன் கவுதமிக்கு சம்பள பாக்கி இருந்தால் ராஜ்கமல் இன்டர் நேஷனல் நிறுவனம் வழங்கும் என்று கூறினார்.

சென்னை விமான நிலையத்தில் கமல் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது தசாவதாரம், விஸ்வரூபம் உள்ளிட்ட படங்களுக்கு ஆடை வடிவமைப்பாளராக இருந்த தனக்கு கமல் ஊதியத்தை வழங்கவில்லை என்றும் அது தனது வாழ்க்கைக்கு தேவைப்படுவதாகவும் கவுதமி கீச்சுவில் புகார் அளித்தது குறித்து கமலிடம் கேட்கப்பட்டது.

 

அதற்கு அவர் எனக்கும் அவருக்கும் எந்த உறவும் இல்லை என்று கவுதமி கூறுவது சரிதான். சம்பள பாக்கி இருப்பது உண்மையாக இருந்தால் அதை நிறுவனம் அவருக்கு வழங்கும். அதற்கென அங்கு அதிகாரிகள் உள்ளனர். அந்த விவகாரத்தை அவர்கள் பார்த்துக் கொள்வார்கள் என்றார்.

ஆந்திராவில் தமிழர்கள் தாக்கப்படுவது குறித்த கேள்விக்கு  பதில்  அளித்த கமல் சட்டவிரோத செயல்களில் தமிழர்கள் ஈடுபடக்கூடாது. ஆந்திரா செல்லும் தமிழக தொழிலாளர்களுக்கு விழிப்புணர்வு தேவை என்றார்.

-தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்தொடர்நாள் எண்: 18,69,711 

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.