Show all

தேர்தல் மன்னர்கள் பத்மராசனும், அக்னி இராமச்சந்திரனும் களமிறங்கும் திருவாரூர் இடைத்தேர்தல்

21,மார்கழி,தமிழ்தொடர்ஆண்டு-5120: தேர்தல் மன்னர்கள் பத்மராசனும், அக்னி இராமச்சந்திரனும் திருவாரூர் இடைத்தேர்தலில் போட்டியிட விண்ணப்பித்துள்ளார்கள். இருவரும் பல தேர்தல்களில் சுயேட்சையாக போட்டியிட்டுள்ளனர். 

சேலம் மாவட்டம் மேட்டூரைச் சேர்ந்தவர் தேர்தல் மன்னன் பத்மராசன். முப்பது ஆண்டுகளுக்கு முன்பு மேட்டூர் சட்டப்பேரவைத் தொகுதி தேர்தலில் முதல்முறையாகப் போட்டியிட்ட இவர், 12 முறை வார்டு கவுன்சிலர் பதவிக்கும், 3 முறை நகராட்சித் தலைவர் பதவிக்கும், 62 முறை சட்டப்பேரவைத் தேர்தலிலும், 40 முறை மாநிலங்களவை தேர்தலிலும், 29 முறை நாடாளுமன்றத் தேர்தலிலும், 2 முறை கர்நாடக மாநிலத்தில் மேலவைத் தேர்தலிலும் போட்டியிட்டவர். 

மேலும், குடியரசுத் தலைவர், குடியரசுத் துணைத் தலைவர் தேர்தலில் போட்டியிட வேட்புமனு பதிகை செய்தவர். அந்த மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டன. 

அனைத்து தேர்தல்களிலும் போட்டியிட்டு கின்னஸ் உலக சாதனை புத்தகத்தில் இடம் பெறுவதே தனது நோக்கமாகக் கொண்டிருக்கிறார் பத்மராசன். இதுபோன்ற தேர்தல் விண்ணப்பத்துக்காக ரூ.25 லட்சம் வரை செலவு செய்துள்ளேன். திருவாரூர் தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிவதை சேர்த்து எண்ணினால் இதுவரை 199 தேர்தலில் போட்டியிட்டுள்ளேன்  என்று கூறியுள்ளார் பத்மராசன். பத்மராசன் பழைய டயர்களுக்கு மேலொட்டு செய்யும் நிறுவனம் வைத்துள்ளார்.

அதேபோல் அக்னி இராமச்சந்திரன் என்பவரும் திருவாரூர் இடைத்தேர்தல் தொகுதியில் போட்டியிட உள்ளார். இவர் தர்மபுரி மாவட்டம் பென்னாகரம் பகுதியைச் சேர்ந்தவர். காட்டுவாசி வீரப்பனின் உறவினரான இவர், இதுவரை திருமணம் செய்யவில்லை. சென்னையில் திரைப்படத் தயாரிப்பு நிறுவனம் ஒன்றில் வேலை செய்துவரும் இவர:; 

பத்தாண்டுகளுக்கு முந்தைய நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிட்டேன். தொடர்ந்து, பல தேர்தல்களில் போட்டியிட்டுள்ளேன். குறிப்பாக திமுக தலைவர் மு.கருணாநிதியை எதிர்த்தும், ஜெயலலிதாவை எதிர்த்தும் போட்டியிட்டேன். நாடாளுமன்றத் தேர்தலில், நரேந்திர மோடி போட்டியிட்ட வாரணாசி, ராகுல் காந்தி போட்டியிட்ட அமேதி ஆகிய தொகுதிகளில் போட்டியிட்டேன். அதேபோல் தற்போது திருவரூர் இடைத்தேர்தலிலும் போட்டியிட உள்ளேன் என்று கூறியுள்ளார்.

-தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்த் தொடர்நாள் எண்: 18,70,023.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.