Show all

மாற்றுக் கட்சி வட்டாரத்திலும் தன் செல்வாக்கை பரப்பி வருகிறாரா தினகரன்

24,பங்குனி,தமிழ்தொடர்ஆண்டு-5119: சேலம் மாவட்டத்தில் உள்ள பா.ம.கவின் முதன்மைப் பிரமுகர்கள் கூண்டோடு விலகி, தினகரன் அணியில் நாளை இணைய உள்ளார்களாம்.

சண்முகம் தலைமையில் முன்னாள் மாவட்ட செயலாளர்கள் ராஜா, ஜெயவேல், மலை பெருமாள், வன்னியர் சங்கத்தின் முன்னாள் மாநில துணைத் தலைவர் கணேசன், கெங்கவல்லி சட்டமன்ற வேட்பாளராகப் போட்டியிட்ட சண்முகவேல் மூர்த்தி, முன்னாள் மாவட்ட அமைப்பாளர் லோகநாதன், பா.ம.கவின் வழக்கறிஞர் சமூக நீதிப் பேரவையின் முன்னாள் துணைத் தலைவர் வழக்கறிஞர் சிவக்குமார், வழக்கறிஞர் வெங்கடேசன், மாவட்ட வன்னியர் சங்க முன்னாள் செயலாளர் பழனிசாமி, உள்பட ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் தினகரனை நோக்கித் திரண்டுவிட்டனர். இவர்கள் அனைவரும் நாளை ஓமலூரில் தினகரன் முன்னிலையில் இணைய உள்ளனர்.

சேலம் மாவட்ட தினகரன் அணியின் நிர்வாகி ஒருவர் பேசும் போது, பா.ம.கவின் முதன்மை நிர்வாகிகளை எங்கள் அணிக்குக் கொண்டு வர வேண்டும் என்பது எங்கள் நோக்கமல்ல. மாற்றுக் கட்சிகளில் இருப்பவர்கள், தினகரன் தலைமையை ஏற்றுக் கொண்டால், அவர்களை வரவேற்கலாம் என்பதுதான் எங்கள் எண்ணம் என்றார்.

நாளை ஓமலூரில் நடக்கும் விழாவில் தினகரன் முன்னிலையில் பா.ம.கவினர் இணைய உள்ளனர். இதற்காக, சுமார் 200 செகுசுந்துகளில் அணிவகுத்துச் செல்ல உள்ளனர்.

-தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்தொடர்நாள் எண்: 18,69,750.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.